பெண்கள் முகம் அழகாக இருப்பதற்கு, கடைகளில் விற்கும் க்ரீம் வாங்கி பயன்படுத்துவது எனப் பல க்ரீம் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலருக்கு முகத்திற்குச் சேராமல் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இயற்கையாகவே உள்ள பொருள்கள் பயன்படுத்தி முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சிலர் நினைப்பார்கள் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
✤ சிலர் க்ரீம் பயன்படுத்தியும் அப்போது மட்டும் முகம் அழகாக இருக்கும் ஆனால் அதற்குப் பிறகு, அந்த அழகு காணாமல் போகும். இந்த பதிவில் முகம் மற்றும் உடலை அழகாக வைக்க இந்த பவுடர் ட்ரைப் பண்ணுவது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ விரலி மஞ்சள் – 100 கிராம்
✤ கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
✤ ரோஜா இதழ்- 50 கிராம்
✤ ஆவாரம் பூ – 50 கிராம்
✤ வசம்பு – 50 கிராம்
✤ கோரைக்கிழங்கு – 50 கிராம்
✤ பூலாங்கிழங்கு- 50 கிராம்
✤ இந்த பவுடர் செய்து காலையில் குளிக்கும் போது பயன்படுத்தலாம். ஆனால் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்தலாம்.
✤ இது இயற்கையாகத் தயாரிப்பதால் குழந்தைகள் முதலில் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். மேலே உள்ள பொருள்கள் அனைத்தும் பக்கத்தில் உள்ள நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி கீழே உள்ள செய்முறை படி செய்து பயன்படுத்தலாம்.
✤ முதலில் மேலே உள்ள கிழங்கு வகை பொருள்களை நன்றாகக் கழுவி இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
✤ மற்ற அனைத்தையும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். அதற்குப் பின், கிழங்கு வகைகளைச் சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும்.
✤ அனைத்தையும் மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை உடல் முழுவதுமாக தேய்க்கலாம். குழந்தைகளுக்குக் கூட பயன்படுத்தலாம்.
✤ இந்த பவுடர் பயன்படுத்தும் போது சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள வேதிப்பொருள்கள் இதில் கலந்து உடலில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
✤ இதில் உள்ள மருத்துவ குணங்களை அந்த சோப்பில் உள்ள வேதிப்பொருள்கள் எடுத்து விடும். இந்த பவுடர் தேவைப்படும் அளவிற்கு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ மீதமுள்ள பவுடர் தண்ணீர் படாமல் வைக்க வேண்டும். இல்லை என்றால் விரைவில் தண்ணீர் பட்டு அழுகிவிடும். அதைப் பயன்படுத்த முடியாது.
✤ இதைப் பயன்படுத்துவதால் முகம் மற்றும் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள முடிகளை எளிதில் நீங்கும். முகம் மற்றும் உடலில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அதிகமான கருமை என அனைத்தையும் சுத்தம் செய்யும்.
✤ முகத்தில் இந்த ஆவாரம்-பூ பூசுவதால் முகத்தில் உள்ள தடிப்புகள், கருமை, கரும்புள்ளிகள், பருக்கள் பேன்றவை எளிதில் நீங்கும்.
✤ முகம் மற்றும் உடலில் உள்ள பருக்கள் மற்றும் மருக்கள், கழுத்தில் உள்ள கருமை, உடலில் மற்ற இடங்களில் உள்ள அதிக கருமைகளை இது எளிதில் நீக்கும்.
✤ இந்த பவுடர் தினமும் பயன்படுத்தினால் உடல் மற்றும் முகம் பளபளப்பாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
✤ கடைகளில் விற்கும் க்ரீம் தரும் அழகை விட இந்த பவுடர் பயன்படுத்துவதால் தரும் அழகு மிகவும் அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…