உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்லாமல், சருமப் பளபளப்பிற்கும் பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல்வேறு வகையான உணவுப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பால் சருமத்தின் நன்மைகளுக்குப் பெரிதும் உதவுகிறது. இதில், உடல் நலத்திற்கு உதவக் கூடிய பால், முகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது.
இது, முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு உதவுகிறது. இயற்கையான ஈரப்பதத்தை அகற்றாமல், சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் ஆழமாக உள்ள கிருமிகளை அகற்ற உதவுகிறது. இதன் மூலம், பளிச்சென்ற சருமத்தைப் பெறலாம். இந்தப் பதிவில், முகத்திற்கு பாலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்துக் காணலாம்.
டோடனராகப் பாலைப் பயன்படுத்தலாம். அதாவது, பச்சை பால் எண்ணெய் சருமம் உள்ளிட்ட அனைத்து வகையான தோல்களுக்குமே, சிறந்த டோனராக செயல்படுகிறது. இது முகத்தின் தசைகளை விரிவடையச் செய்து, அதன் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இந்த பால் டோனரை எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம்.
தேவையானவை
பச்சை பால் – 2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – 4 முதல் 5 சொட்டுகள்
செய்முறை
பால் டோனர் செய்வதற்கு, பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இதனை பருத்திப் பஞ்சு கொண்டு முகத்தில் தடவிக் கொள்ளவும். ஒரே இரவில் சிறந்த பலனைப் பெறுவதற்கு இது உதவும். வழவழப்பான பாலுடன், இரவில் தூங்குவதற்கு பிடிக்கவில்லை எனில், பாலை முகத்தில் தடவிய பின் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பாலில் உள்ள லாக்டிக் அமிலமானது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, அதில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது. அதன் படி, பாலைப் பயன்படுத்தி முகத்தில் மாஸ்க் அப்ளை செய்வதன் மூலம் முகம் பளிச்சென்று மாறிவிடும். இவ்வாறு முகத்தில் மாஸ்க் அப்ளை செய்த பின், சுமார் 15-20 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்திற்கு சரும பாதுகாப்பைத் தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை இதனைச் செய்வதன் மூலம், பளிச்சென்ற, மென்மையான சருமத்தைப் பெறலாம்.
தேவையானவை
பால் - 2 முதல் 3 தேக்கரண்டி
தக்காளி சாறு – 2 முதல் 3 தேக்கரண்டி
செய்முறை
முதலில், பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் இரண்டு பொருள்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின், பிரஷ் ஒன்றை எடுத்து முகத்தில் சமமாகப் பரப்பிக் கொள்ளவும். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு விட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மேலும், உடலில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு இந்த இரண்டு பொருள்களையும், அதிக விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…