Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகப் பொலிவிற்கு பாதாம் ஆயில். இப்படி மசாஜ் பண்ணுங்க.! இனி பார்லருக்கே போக மாட்டீங்க..

Gowthami Subramani Updated:
முகப் பொலிவிற்கு பாதாம் ஆயில். இப்படி மசாஜ் பண்ணுங்க.! இனி பார்லருக்கே போக மாட்டீங்க..Representative Image.

நம் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க, ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு செய்து பியூட்டி பார்லர் செல்வது, அதிகமான விலையில் அழகு சாதனப் பொருள்கள் வாங்கி பயன்படுத்துவது போன்றவற்றைச் செய்கிறோம். இது போன்ற செலவுகளைச் செய்தாலும், அது நம் முகத்தில் இருப்பது குறைவான நாள்களே ஆகும். எனவே, குறைவான செலவில் வீட்டிலேயே இயற்கையான பொருள்கள் மூலம் ஃபேசியல் செய்யலாம். இது குறித்த விவரங்களை இதில் காண்போம்.

முகப் பொலிவிற்கு பாதாம் ஆயில். இப்படி மசாஜ் பண்ணுங்க.! இனி பார்லருக்கே போக மாட்டீங்க..Representative Image

முகத்திற்கு பாதாம் ஆயில்

குளிர்காலம், கோடைகாலம் என எந்தக் காலத்திலும் சருமத்தைப் பாதுகாப்பாக வைப்பது முக்கியமானதாகும். சருமமானது கரடு முரடாக இருக்கும் போது, பாதாமில் இருந்து எடுக்கப்படும் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தைப் பாதுகாக்கலாம். அதே சமயம், வெறுமனே பாதாம் ஆயிலை இரவு தூங்கும் முன்பு நம் முகத்திற்குத் தடவி காலையில் எழுந்து குளித்து வந்தாலே சருமம் பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம், பாதாம் எண்ணெயுடன் கடலை மாவு சேர்த்துக் கொள்வதன் மூலமும் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

முகப் பொலிவிற்கு பாதாம் ஆயில். இப்படி மசாஜ் பண்ணுங்க.! இனி பார்லருக்கே போக மாட்டீங்க..Representative Image

பாதாம் ஆயிலுடன் கடலை மாவு

✤ சருமத்திற்கு பாதாம் ஆயிலை கடலை மாவுடன் எப்படி தேய்த்தால் அழகான சருமத்தைப் பெறலாம் என்பதைப் பார்க்கலாம்.

✤ ஒரு ஸ்பூன் அளவு கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ இதனைச் சுத்தமான பாதாம் எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✤ இதை ஒரு பேஸ்ட் போல தயாரித்து விரல்களைக் கொண்டு சர்க்குலர் மோஷனில் வட்டமாகச் சுழற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

✤ இவ்வாறு குறைந்த 15 நிமிடங்கள் வைத்து மசாஜ் செய்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

✤ பிறகு, மெல்லிய காட்டன் துணியின் மூலம் முகத்தை ஒற்றி எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு முகத்தைத் துடைக்கும் போது அவற்றிற்கு அழுத்தம் தரக் கூடாது.

✤ மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், முகப்பருக்கள் நீங்குவதுடன் முகம் பளபளப்பாகி விடும். இது போல, வாரம் ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை,  செய்து வந்தால், சருமத்தில் எந்த விதமான பிரச்சனைகளும் நீங்காது.

✤ இவ்வாறு கடலை மாவுடன் பாதாம் எண்ணெயைச் சேர்த்து சருமத்திற்கு அப்ளை செய்வதன் மூலம், சருமத்தைப் பாதுகாக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்