பொதுவாக மழைக்காலத்தில் சளிபிடிப்பது என்பது தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் வெயில் காலத்தில் கூட பலருக்கும் சளிபிடிக்கத் துடங்கி விட்டது. சளியுடன் காய்ச்சல் மற்றும் தும்மல், இருமல், போன்ற சேர்ந்து வரும். அத்துடன் வெயில் சூடு சேர்ந்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை முழுவதுமாக தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ வெயிலில் அதிகளவில் சென்று வியர்வையுடன் கடைகளில் விற்கும் ஐஸ் போட்ட ஜூஸ் குடிப்பதாலும் மற்றும் பல சூடுதனிக்கும் பொருள்கள் வாங்கி சாப்பிடும் போது அதில் ஐஸ் அதிகளவில் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
✤ வெயிலில் வேலை செய்து விட்டு வியர்வையுடன் வீட்டிற்கு வந்த உடன் குளிர்ந்த நீரில் குளிக்காமல் சிறிது நேரத்திற்குப் பிறகு சாதாரணமான நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
✤ அதிகளவில் வியர்வையுடன் இருக்கும் போது குளிர்ந்த நீர் குடிப்பது மற்றும் ஏ.சி பயன்படுத்தி வியர்வையைத் தனிப்பதைத் தவிர்க்கவும். இதை செய்வதாலும் கூட சளிப்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.
✤ வெயிலில் வேலை செய்து அதிகளவில் வியர்வை வரும் எனத் தெரிந்தால் முன்னதாகவே நீங்கள் காட்டன் துணிகளைப் அணிந்து கொள்வது நல்லது. இது வியர்வையை முழுவதுமாக துணி உறிஞ்சிக் கொள்ளும். அதனால் எளிதில் வியர்வை குறையும்.
✤ குழந்தைகள் வெயிலில் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த உடன் வியர்வையான ஆடைகளில் இருக்காமல் உடனடியாக மாற்றுவது நல்லது. இதனால் துணிகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் உடலில் தொற்றிக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.
✤ வெயில் காலத்தில் நீங்கள் அதிகமாக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவது நல்லது. நோய் எதிர்ப்பு சத்துகள் அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் சளிப் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் மற்றும் வந்தால் கூட அதை எதிர்கொள்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
✤ வெயிலில் அதிகமாக செல்லவதால் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறைவதால் நீர்ச்சத்துகள் அதிகமாக இருக்கும் பொருள்களைச் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதில் ஐஸ் அதிகமாகச் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குளிர்ந்த நீரில் குடிக்க மற்றும் குளிப்பதற்குப் பயன்படுத்துவது தவிர்க்கவும்.
✤ பொதுவாகக் கோடைக்காலம் மற்றும் மழைக்காலம் எந்த காலம் ஆக இருந்தாலும் சளிபிடித்தால் ஒரு வாரம் நீடிக்கும்.அதைத் தடுப்பதற்கு ஆவிபிடிப்பது மிகவும் உதவியாகவும் மற்றும் விரைவில் சளிசரியாகவும் உதவும்.
✤ சளிபிடித்தால் கசாயம் மற்றும் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் அது அதிகரிக்காமல் தடுக்கலாம். சளிசரியாகும் வரை குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுகள் சாப்பிடுவது தவிர்க்கலாம்.
✤ சளிபிடித்து ஒரு வாரத்திற்கு பிறகும் நீடித்தால் அதை அப்படியே விடாமல் மருத்துவர் ஆலோசனைப் பெறுவது மிகவும் அவசியம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…