வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க. சப்பாத்தி செய்ற நேரத்தை விட காமியான நேரத்தில் சூப்பரான பட்டர் குல்ச்சா செய்யலாம். கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும். இதுக்காக தனியா பொருட்கள் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்க வீட்டில் இருக்கும் தினசரி சமையல் பொருட்களை போதும் செய்யலாம்.
இந்த பதிவில் வீட்டிலையே சுவையான பட்டர் குல்ச்சா செய்வது எப்படி? என்று சொல்லி இருக்கோம். இதை செய்து கிரேவி சேர்த்து சாப்பிட்டா சும்மா சூப்பரா இருக்கும்.
மைதா - 1 கப் + கொஞ்சம் கூடுதலாக
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - தேவைக்கேற்ப.
முதலில் குல்ச்சாவுக்கு மாவு தயார் செய்யணும். எனவே, பாத்திரத்தில் பால், சர்க்கரை, உப்பு, எண்ணெய், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இப்போ அதில் கொஞ்சம் கொஞ்சமாக மைதாவை சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
அதனை 30 நிமிடம் காத்து படாத அளவிற்கு மூடி வைக்கவும்.
மாவு ஊறியதும் அதனை உங்களுக்கு ஏற்ற அளவுக்கு எடுத்து உருட்டி, சப்பாத்தி போல தேய்க்கவும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி குல்ச்சாவை போடவும். அதன் மீது பட்டர் சற்று தடவி திருப்பி போடவும்.
இதே போன்று அனைத்தையும் போட்டு எடுத்து, சூடான கிரேவியை சேர்த்து சாப்பிடும் போது சூப்பரா இருக்கும்.
இவ்ளோ தான் சிம்பிளான பட்டர் குல்ச்சா தயார். குடும்பத்திற்கு செய்து கொடுத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…