மழை வரும் போது நம் நினைவுக்கு முதலில் வருவது குடை கூட இல்ல. டீயும் பஜ்ஜியும் தான். அதிலும், மழையில் சூடான டீயுடன், பஜ்ஜி சாப்பிட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும். கேட்கும் போதே எப்போ சாப்பிடணும்னு தோணும். அதிலும் மிளகாய் பஜ்ஜி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மாலை நேரத்தில் ஸ்னேக்ஸ் ஆக எளிதாக செய்வதில் இந்த ரெசீபியும் அடங்கும். இதில், சுடசுட சுவையான மொறு மொறு பஜ்ஜியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
பஜ்ஜி மிளகாய் – 6
வர மிளகாய் – 2
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – ½ கப்
வெங்காயம் – 2
புளி – சிறியது
பூண்டு – 2 கப்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சோடா உப்பு – 1 சிட்டிகை அளவு
பெருங்காயத் தூள் – சிறியது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
முதலில் வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பஜ்ஜி மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.
பிறகு, பாத்திரம் ஒன்றில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி போடுவதற்கு ஏற்ற பதத்திற்குக் கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின், மிக்ஸியில் நறுக்கப்பட்ட வெங்காயம், புளி, பூண்டு, வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அரைத்த கலவையை, விதை நீக்கப்பட்ட கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, வாணலி ஒன்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறிய பிறகு, இந்த மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் முன்னும், பின்னும் பிரட்டி, எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
இது போல, அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான மசாலா மிளகாய் பஜ்ஜியை உண்ணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…