நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் இந்த இந்த பொருட்களெல்லாம் நோய் மருந்துகள் என தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டு காலம் நலமுடன் வாழ்ந்தனர்.
நம் பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் விரைவில் பலன் தரும் வகையிலே இருக்கும். எந்தெந்த பிரச்னைகளுக்கு எந்தெந்த வைத்தியங்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
அஜீரணமாக இருக்கும் சமயங்களில் நல்ல மிளகை வறுத்துப் பொடி செய்து திரிகடி பிரமாணம் தேனில் உட்கொள்ளத் தீரும்.
சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.
ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் எடுத்துக் கொண்டு நெற்றியில் போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.
சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…