தைப்பூசத் திருநாளில் முருகப் பெருமானுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். முருகனுக்குப் பிடித்த உணவுகளில் திணையும் ஒன்று. அந்த வகையில் தைப்பூசம் நன்னாளன்று சூப்பரான சுவையில் திணை பாயாசம் சமைத்து வழிபடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அமையும் திணை பாயாசம் செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.
ருசியாக உணவு சாப்பிடுவதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், உடலுக்கு நன்மை தரும் வகையில் உணவு உண்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் தரும் அருமையான உணவு வகைகள் நிறைய உள்ளன. அந்த வகையில், இனிப்பு கலந்த அம்சமான சுவையில் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படும் திணை பாயாசம் செய்வது எப்படி என்பதை இதில் காணலாம்.
திணை அரிசி – ½ கப்
வெல்லம் – ¾ கப்
சிறு பருப்பு – 4 டீஸ்பூன்
தேங்காய் பால் – ½ கப்
ஏலக்காய் – ½ டீஸ்பூன்
தேங்காய் துருவியது – ½ கப்
முந்திரி, திராட்சை – 10
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
✤ முதலில், திணை அரிசியை கடாய் ஒன்றில் அதனை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ பிறகு, குக்கரில் வறுத்த திணை அரிசியுடன் சிறு பருப்பும் சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
✤ இதனை 3 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதன் பின், கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி உருக்கிக் கொள்ள வேண்டும்.
✤ குக்கரில் அரிசி வெந்த பிறகு, உருக்கிய வெல்லத் தண்ணீரை ஊற்றி கிளறி விட வேண்டும். இதோடு தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
✤ இதனை இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டால் போதுமானது.
✤ பிறகு, தனியே கடாய் ஒன்றில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி அதனை அப்படியே பாயாசத்தில் கொட்டி கலக்க வேண்டும்.
✤ இப்போது சுவையான திணை பாயாசம் தயாராகி விடும். எளிமையான முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் திணை பாயாசத்தை வீட்டிலேயே செய்து உண்ணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…