தினமும் காலையில் என்ன சமைக்கவேண்டும் என எனப் பலரும் யோசிப்பார்கள். தினமும் காலையில் புதிது புதிதாக ஏதாவது எளிமையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். குழந்தைகளுக்குச் சத்து நிறைந்த உணவாகவும் பிடித்த உணவாகவும் இருக்க வேண்டும் அப்படி ஒரு உணவை எப்படிச் செய்வது எனப் பலரும் நினைப்பார்கள்.
✤ சத்து நிறைந்த உணவாகவும் மற்றும் எளிமையாகச் செய்யக்கூடிய உணவாகவும் வேண்டும். உடல் எடை அதிகரிக்காமல் மற்றும் டயட் இருப்பவர்கள் கூட காலையில் இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சத்து நிறைந்த அவல் தோசை செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ அவல் – 2 கப்
✤ வெங்காயம் – 4
✤ கேரட் – 4
✤ கொத்தமல்லி – சிறிதளவு
✤ கருவேப்பிலை – சிறிதளவு
✤ கடுகு, கடலைப்பருப்பு – சிறிதளவு
✤ பச்சைமிளகாய் - 4
✤ மோர் – 2 கப்
✤ எண்ணெய் – 5ஸ்பூன்
✤ எலுமிச்சை சாறு- 1/2கப்
✤ முதலில் அவல் எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். அதில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்து விடவேண்டும்.
✤ வெங்காயம் எடுத்துத் தோல் உரித்து நன்றாகக் கழுவ வேண்டும். அதை பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.
✤ கேரட் எடுத்து மேல் தோல் சீவி நன்றாகக் கழுவ வேண்டும். அதை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய் எடுத்துக் கழுவி அதைச் சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.
✤ கழுவிய அவல் உடன் இரண்டு கப் அளவிற்கு, புளித்த மோர் சேர்த்துக் கொள்ளவும். புளித்த மோர் இல்லை என்றால் மோரில் அரை கப் அளவிற்கு, எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நிமிடத்திற்குப் பின், கழுவிய அவலை சேர்க்க வேண்டும்.
✤ ஒரு 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் அவலை மோரில் ஊற வைக்க வேண்டும். அதற்குப் பின், அந்த அவலில் உள்ள தண்ணீரை வடித்து அவலை மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு வடித்த தண்ணீரைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
✤ அதைத் தோசை மாவு பதத்திற்கு, அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து, சூடான பின், அதில் கடுகு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். கடுகு பொறிந்த பின், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
✤ அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதை அரைத்த அந்த அவல் தோசை மாவில் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அதில் கொத்தமல்லி தலையைக் கழுவி சிறிது சிறிதாக நறுக்கிச் சேர்க்க வேண்டும்.
✤ அடுப்பில் தோசைக் கல் வைத்து, சூடான பின் அதில் கலக்கிய தோசை மாவை ஊற்றி சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்தால் காலையில் டிபன் தயார்.
✤ வெங்காயத்தை மற்றும் கேரட்டை வதக்காமல் தோசை மாவில் சேர்த்துக் கலக்கிக் கூட தோசை சுட்டுச் சாப்பிடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…