Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thiruvathirai Kootu Recipe: திருவாதிரை கூட்டு செய்வது எப்படி?

Gowthami Subramani Updated:
Thiruvathirai Kootu Recipe: திருவாதிரை கூட்டு செய்வது எப்படி?Representative Image.

வளங்களை அள்ளித் தரும் மார்கழி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் உண்டு. அந்த வகையில், இந்த மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை போன்றவை சிறப்பு வாய்ந்தவை. நன்னாளான திருவாதிரை நாளில் திருவாதிரை களி, கூட்டு செய்து இறைவனுக்குப் படையலிட்டு வழிபடுவர். திருவாதிரை நோன்பு மேற்கொள்பவர்கள், இறைவனுக்குப் படைத்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வர்.

திருவாதிரை நாளில் செய்யப்படும் ஏழு தான் கூட்டு எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | திருவாதிரை விரதம் (மாங்கல்ய நோன்பு) இருப்பது எப்படி? தாலி கயிறு மாற்றும் முறை

Thiruvathirai Kootu Recipe: திருவாதிரை கூட்டு செய்வது எப்படி?Representative Image

தேவையான பொருள்கள்

ஏழு கறிகாய்கள் – பூசணிக்காய், பரங்கிக் காய், அவரைக்காய், சேனைக்கிழங்கு, மொச்சை, வாழைக்காய், சர்க்கரை வல்லிக்கிழங்கு

நறுக்கிய காய்கறிகள் – 5 கப்

துவரம் பருப்பு (வேக வைத்தது) – ½ கப்

சாம்பார் பொடி – 1½ கரண்டி

உப்பு – தேவையான அளவு

தனியா – ¼ கப்

மிளகாய் வத்தல் – 6

கடலைப்பருப்பு – ¼ கப்

பெருங்காயம் – சிறிய கட்டி

தேங்காய் (துருவியது) – ¼ கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

வெல்லம் – சிறிதளவு

அரிசி மாவு – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

Thiruvathirai Kootu Recipe: திருவாதிரை கூட்டு செய்வது எப்படி?Representative Image

திருவாதிரை 7 கறி கூட்டு செய்வது எப்படி?

முதலில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், தேங்காய், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரில் காய்கறிகளைப் போட்டு, பிறகு உப்பு, சாம்பார் பொடி போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர், தனியா, கடலைப்பருப்பு உள்ளிட்டவற்றைச் சேர்த்து செய்த பொடியைப் போட வேண்டும்.

இதில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். இது கொதித்த பின்னர் சிறிதளவு வெல்லம் போடவும்.

அதன் பிறகு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

இதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

கடைசியாக இதில் அரிசி மாவைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

அதன் பின்னர், மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.

இப்போது, திருவாதிரை ஸ்பெஷலான ஏழு தான் கூட்டு தயாராகி விட்டது. இதனையும் திருவாதிரை களியும் சேர்த்து இறைவனுக்குப் படையலிட்டு பிறகு திருவாதிரை நோன்பை முடித்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்