தினத்தோறும் நமது வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக உணவுப் பழக்கங்கள், காலை வேலைகளில் அதிக நேரம் தூங்குவது அதன் பின், நேரம் தாண்டிய பின் உணவு சாப்பிடுவது அல்லது காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் குறைவாக மற்றும் சாப்பிடாமல் செல்வதால் ஏற்படும் விளைவுகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த வயிற்றில் சேரும் உப்புசத்து. இதனால் வயிற்றில் உப்புசத்து அதிக அளவில் ஏற்படுகிறது. சரிவாங்க.. இந்த பிரச்சனை எப்படிச் சரிசெய்வது என்பதைப் பார்க்கலாம்.
✤உணவு சாப்பிட்ட பிறகு, வயிற்றில் காற்று நிரம்பி விடுவதால் வயிறு ஆனது கனமாக இருப்பது போல் அல்லது வயிறு இயல்புநிலை இருந்து மாறி பெரியதானது போல் தோன்றினால் அல்லது உப்பியது போல் தோன்றினால் அது தான் ஆங்கிலத்தில் புலோட்டிங்க் (Bloating) எனக் கூறுவார்கள்.
✤இது உணவு சாப்பிட்ட பிறகு,உடனடியாக அல்லது மூன்று மணி நேரத்திற்குப் பிறகு,வயிற்றில் உப்பியது போல் இருக்கும்.இது எதனால் ஏற்படுகிறது.எனப் பார்க்கலாம்.
✤காலை வேலைகளில் மற்றும் சரியான நேரங்களில் உணவுகளைச் சாப்பிடத் தவறுவதால் ஏற்படுகிறது. ஏனெனில் சாப்பிடும் நேரங்களில் இரைப்பையில் சில வகையான அமிலங்கள் சுரக்கின்றன. அந்த அமிலங்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீரிருடன் சேர்ந்து உணவாக இரைப்பைக்குச் செல்வதால், நாம் சாப்பிடும் உணவு செரிமான ஆகும். ஆனால் நாம் சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால், இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள் அதன் சுவரை அரிப்பதால் வயிற்றில் மற்றும் வாயில் எளிதில் புண்கள் ஏற்படுகிறது. அது தொடர்ந்தால் இரைப்பையில் மந்தத்தன்மை ஏற்படும். செரிமான சம்மந்தப்பட்டதில், இரண்டு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை,
✤நன்மைத் தரும் பாக்டீரியாக்கள்
✤தீமைத் தரும் பாக்டீரியாக்கள்
நன்மைத் தரும் பாக்டீரியாக்கள் எந்த விதமான பாதிப்புகளைத் தருவது இல்லை. தீமைத் தரும் பாக்டீரியாக்கள் SIBO (Small Intestinal Bacterial Overgrowth) எனச் செல்வார்கள். இந்த பாக்டீரியாக்கள் சிறுகுடலில் தீமை செய்யும் பாக்டீரியாக்களை அதிகளவில் பெருக்கி வயிறு உப்பிப் போவதற்கான காரணங்களில் இதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
✤நாம் உணவுகளைச் சாப்பிடும் போது நம் உணவானது முதலில் உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்குச் சென்று, அந்த இடத்தில் செரிமானம் ஆகிய பின், சிறுகுடலுக்குச் செல்லும்.
✤சிறுகுடலில் வழியே செல்லும் உணவுகளின் சத்துகளைப் பிரித்து எடுக்கப்பட்ட பின்னர், மிதமுள்ள உணவுகழிவுகளை பெருங்குடல் வழியாக வெளியேற்றப்படும்.
✤உணவானது சிறுகுடலிலிருந்து பெருங்குடலில் சென்று சேரும் இடத்தில் நன்மை தரும் பாக்டீரியாஸ் மற்றும் தீமைத்த்ரும் பாக்டீரியாஸ் உருவாகிறது. நன்மைத் தரும் பாக்டீரியாஸ் உணவு செரிமான அடைவதற்கும் மற்றும் தீமைத்தரும் பாக்டீரியாஸ் செரிமான அடையாத உணவுகளுடன் வினைபுரிந்து வாயுக்களாக மாற்றவும் செய்கிறது. இதனால் தான் சாப்பிட்ட பிறகு, வயிறு உப்பியது போல் தோன்றுகிறது.
✤இதனால் தான் மருத்துவர்கள், ஆண்டி பயாட்டிக் மாத்திரைகள் தரும் போது அதனுடன் ப்ரோ பயாட்டிக் மாத்திரைகளும் சேர்த்து தருகிறார்கள்.
✤ஆண்டி பயாட்டிக் மாத்திரைகள் சாப்பிட்டால் அது நன்மை மற்றும் தீமை தரும் பாக்டீரியாஸ் அழித்துவிடும். ஆனால், ப்ரோ பயாட்டிக் மாத்திரையில் நன்மை தரும் பாக்டிரியாஸ் உள்ளது. இதனால், இது ஆண்டி பயாட்டிக் மாத்திரையுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.
✤பழைய உணவுப்பழக்கங்களில் தண்ணீரில் ஊற வைத்த பழைய சோற்றைச் சாப்பிட்டு வாழ்ந்தோம். அதனால் நம் உடலில் இயற்கையாகவே ப்ரோ பயோட்டிக் இருந்தது. ஆனால் இப்போது எந்த உணவைப் பார்த்தாலும் கொழுப்பு நிறைந்த உணவுகளாக இருப்பதால், நம் ப்ரோ பயாட்டிக்கை மாத்திரையாக எடுத்து கொள்வதாக மாறிவிட்டது.
✤உடனே சிகிச்சை எனக் கருதி மாத்திரை மற்றும் மருந்து என போகாமல் நீங்களே உங்கள் உடலைச் சரிசெய்து கொள்ள ஒரு நல்ல தீர்வு.
✤முதலில் சரியான நேரத்தில் தூங்கி, மற்றும் மிகமுக்கியமாகச் சரியான நேரத்தில் சாப்பிட்டு, தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டு, சீரான நிலைக்கு, உடலை முழுவதுமாக மாற்றி பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பலாம். இதனைச் செய்வதன் மூலம் வயிற்றில் உப்புசத்து எளிதில் சரிசெய்யும்.
✤உணவுப் பழங்களை மாற்ற வேண்டும். முதலில் வெளியில் சாப்பிடக் கூடிய துரித உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளவும். உணவில் அதிகளவில் கார்போஹைட்ரேட் காணப்படும் உணவுகளைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இந்த வகையான உணவுகளில் வாயுக்கள் அதிக அளவில் உள்ளதால் அதைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது..
[குறிப்பு: மேலே குறிப்பிட்டவைகளை தொடர்ந்து பின்பற்றியும், இந்த வயிற்றில் உள்ள உப்புசத்து குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.]
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…