Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vastu Tips for Plants and Trees in Tamil | தோஷம் நீக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பக்கம் வைக்கக்கூடாது..!!

Nandhinipriya Ganeshan July 11, 2022 & 10:45 [IST]
Vastu Tips for Plants and Trees in Tamil | தோஷம் நீக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பக்கம் வைக்கக்கூடாது..!!Representative Image.

Vastu Tips for Plants and Trees in Tamil: வீட்டில் தோட்டம் வைக்கும் அளவிற்கு இடம் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன தொட்டிகளில் பல வகையான செடிகளை வைத்து அதை பராமரித்து அதில் மலரும் பூக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், எந்த செடியை வீட்டின் எந்த பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

மனை தோஷம் நீக்கும் செடிகள்

நம் முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள் என்று நாம் அறிந்ததே. அந்த வகையில், வீட்டின் முன்புறமாக அதாவது வாசல் பகுதியில் மல்லி, முல்லை, ஜாதி மல்லி போன்ற பூக்களின் செடிகளை வளர்த்து வந்தார்கள். இந்த பூ செடிகளை வீட்டின் முன்புறமாக வளர்த்தது வெறுமனே வாசனைக்காகவோ அல்லது அழகுக்காகவோ மட்டுமல்ல. பொதுவாக, பாரிஜாதம், மல்லி, தும்பை, சாமந்தி, ஜாதி மல்லி, முல்லை, பாதிரி மலர் போன்ற மலர்கள் விநாயகருக்கு மிகவும் உகந்தவை. எனவே, இந்த செடிகளை வளர்ப்பதால் வீட்டில்  ஏதேனும் மனை தோஷங்கள் இருந்தால் கூட சரியாகிவிடும். எனவே, இவற்றை வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

வேப்ப மரம் வளர்க்கலாமா?

வேப்ப மரம் அம்மனுக்கு உகந்த மரம். எனவே வீட்டின் எந்த பகுதியிலும் வேப்பமரத்தை வளர்க்கலாம். ஆனால், நன்றாக வளர்ந்துக் கொண்டிருந்த மரத்தை வெட்டிவிட்டால் அந்த வீட்டில் சந்தோசம், ஒற்றுமை, ஆரோக்கியம் அனைத்தும் கெட்டு விடும். எனவே, வேப்பமரத்தை எக்காரணத்திற்காகவும் வெட்டிவிடாதீர்கள்.

ஒற்றை வாழை மரத்தை வளர்க்க கூடாது

சந்ததியை வாழையடி வாழையால் தழைக்க செய்யும் வாழை மரத்தை வீட்டில் வளர்ப்பது அவ்வளவு நல்லது. ஆனால், ஒற்றை வாழை மரத்தை வளர்க்ககூடாது. சிறு குருத்தாவது அதன் துணையாக அருகில் நட்டு வைக்க வேண்டும். ஏனென்றால், மறு கன்று இல்லாத அல்லது துணை இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது என்று சொல்வார்கள்.

துர்பாக்கியத்தை தரும் மரங்கள்

முருங்கை மரம் மற்றும் மா மரம் இரண்டையும் வீட்டின் வாசலுக்கு நேராக, குறிப்பாக நிலக்கதவிற்கு நேர் எதிராக வளர்க்கவே கூடாது. அதாவது, நீங்க நிலகதவை திறந்தவுடன் அம்மரம் தெரியும்படி இருக்கக் கூடாது. அது துர்பாக்கியத்தை தரும் என்று சொல்வார்கள். எனவே, வீட்டின் பின்புற பகுதிகளில் வளர்த்துக் கொள்ளலாம்.

அதேப்போல், ஒற்றை தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது. எப்போதுமே மற்றொரு கன்றோடு சேர்த்து தான் வளர்க்க வேண்டும். இதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ரோஜா செடியை வீட்டின் முன் வளர்க்கலாமா?

வாஸ்து சாஸ்த்திரத்தில் முட்கள் உள்ள செடிகளை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது என்று சொல்லப்படுகிறது. அதனால், தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன் பகுதியிலோ அல்லது வாசலுக்கு நேராகவோ ரோஜா செடிகளை வளர்க்க மாட்டார்கள். ரோஜாவும் நல்ல அழகாக பூத்துக் குலுங்கும் மலர் தானே என்றாலும், அவையும் முட்களை கொண்டிருக்கின்றன அல்லவா?

இது தெரியாமல் நாம்பலோ விதவிதமாக ரோஜா செடிகளை வாங்கி வீட்டின் வாயில் பகுதியில் வைத்து வளர்த்து கொண்டிருக்கிறோம். ரோஜா செடிகளை வளர்க்கலாம் தவறில்லை; ஆனால் வீட்டின் பக்கச்சுவர் பகுதியிலோ அல்லது மாடியிலோ அல்லது மாடிப்படியிலோ வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இனி இதை கடைப்பிடியுங்கள்.

Tags:

Vastu tips for plants and trees | Vastu shastra plants and trees | Which plants are not good for home vastu | Which plant is good for home entrance | Tree in front of house vastu in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்