Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காரமடையான் நோன்பு வெல்ல அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Vella Adai Recipe in Tamil

Gowthami Subramani Updated:
காரமடையான் நோன்பு வெல்ல அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Vella Adai Recipe in TamilRepresentative Image.

காரடையான் நோன்பு விரதத்தில் அம்மனுக்கு இனிப்பு அடை மற்றும் உப்பு அடை படைப்பது வழக்கம். காரடையான் நோன்பு விரதத்தில் இனிப்பு அடையாக வெல்ல அடை தயார் செய்யலாம். காரடையான் நோன்பு அன்று அம்மனுக்கு இவற்றை படைத்து வழிபடுவது சிறந்தது. இந்த காரடையான நோன்பானது பங்குனி மாதம் பிறக்கும் போது வழிபாடு செய்யப்படுகிறது.

இதில், வெல்ல அடை தயார் செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.

காரமடையான் நோன்பு வெல்ல அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Vella Adai Recipe in TamilRepresentative Image

வெல்ல அடை செய்ய தேவையானவை

பச்சரிசி - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 2 கப்
காராமணி - 1/4 கப்
ஏலக்காய் - 1
தேங்காய், பற்கள் நறுக்கியது - 4 மேஜைக்கரண்டி
வெல்லம் - 1 கப்

காரமடையான் நோன்பு வெல்ல அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Vella Adai Recipe in TamilRepresentative Image

காரடையான் நோன்பு வெல்ல அடை செய்வது எப்படி?

✤ முதலில் அரிசியை 2 மணி நேரம் என்ற கணக்கில் ஊற வைக்க வேண்டும்.

✤ பின்னர், அதை சுத்தமான துணி கொண்டு உலர்த்தவும்.

✤ காராமணி எடுத்து அத்துடன் இதர நவதானியங்களையும் (அரிசி தவிர) சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

✤ அதன் பின்னர், அதனை நீரில் ஊற வைக்கவும். இவ்வாறு, ஊற வைத்தால் காராமணி தனியாக வேக வைக்க வேண்டிய அவசியமில்லை. கொதிக்க வைத்தாலே வெந்து விடும்.

✤ அரிசி நன்றாக உலர்ந்த பிறகு, அதனை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை சலித்துக் கொள்ளலாம்.

✤ இந்த சலித்த மாவை, வெறும் வாணலி ஒன்றை எடுத்து அதில் லேசாக வறுக்கவும். இவற்றை ஆவி வரும் வரை வறுத்தால் போதுமானது. சிவக்கும் வரை வறுக்க வேண்டாம்.

✤ அதன் பின்னர், வெல்ல அடைக்குத் தேவையான அளவு எடுத்து, அளந்து வைத்துக் கொள்ளவும். 

✤ பிறகு, வாணலி ஒன்றில் வெல்லம் எடுத்து தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி சூடு செய்ய வேண்டும். இதில், வெல்லம் முழுவதுமாக கரைய வேண்டும்.

✤ இவ்வாறு வெல்லம் கரைந்த பின்னர், வடிகட்டியில் ஊற்றி வடி கட்டி அதில் வெல்லப் பாகை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

✤ இந்த வெல்லப் பாகை மீண்டும் சூடு செய்ய வேண்டும். இவ்வாறு கொதிக்கும் பாகில் காராமணியைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

✤ பிறகு அதில் மாவு சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறலாம். இத்துடன் நறுக்கி வைத்த தேங்காய் பற்களைச் சேர்த்து இறக்கி விடலாம்.

✤ அதன் பிறகு, இந்த மாவு ஆறிய பிறகு, கைகளில் சிறிது எண்ணெய் தொட்டு பிசைந்து சம உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.

✤ இந்த உருண்டையை எண்ணெய் தடவிய இட்லி தட்டு ஒன்றை எடுத்து, அதில் சிறு அடைகளாகத் தட்டி, நடுவில் ஓட்டை ஒன்று போட்டு இட்லி பானையில் வேக வைக்கவும். இவ்வாறு 5-8 நிமிடம் வரை வேக வைக்கலாம்.

இவற்றை உருகாத வெண்ணெயுடன் வெல்ல அடையை நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்