இந்த உலகத்தில் வாழும் அனைவருமே வாழ்க்கையில் ஏதேனும் ஓர் தருணத்தில் துவண்டு போகும் சூழல் ஏற்படும். அந்த தருணத்தில் நம்முடன் அனைவரும் இருந்தாலும், நமக்காக யாருமே இல்லாதது போல் ஒரு உணர்வு ஏற்படும். அதில் இருந்து மீண்டு வந்து வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் மிகவும் குறைவு. மற்றவர்கள் அந்த சிரமத்தை நினைத்துக்கொண்டே தங்களின் அழகான வாழ்க்கையை சீரழித்துக் கொள்வார்கள். அப்படியானவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல மேற்கோள்கள் உள்ளன. அதில் சிலவற்றை இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். அதனை நீங்கள் மட்டும் படித்து பயன்பெறாமல், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அதனை அனுப்பி வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ தொடங்குங்கள்.
ஜெய்கின்ற பக்கம் நிற்பவன் வீரன் அல்ல
தான் நிற்கின்ற பக்கத்தை ஜெயிக்க வைப்பவன் தான் வீரன்
உங்களின் வறட்டு கௌரவம் பிடிவாதம் எப்போதுமே நல்லதை சொல்லித் தராது
அது உங்களுக்கு பேரிழப்பை தான் கற்றுக்கொடுக்கும்
எல்லாரும் பயணிக்கிறார்கள் என்று அதே பாதையை நீ தேர்ந்தெடுக்கதே
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு
உன்னுடைய மதிப்பை நீ தான் முடிவு செய்ய வேண்டும்
மற்றவர்கள் அல்ல
யாராலையுமே குறைபாடற்ற மனிதராக இருக்க முடியாது
ஆனால் சிறந்த மனிதராக வாழ கடைசி நொடி வரை முயற்சிக்க வேண்டியது அவசியம்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…