சென்னையை சேர்ந்த பிரபல மொமைல் பேமெண்ட் நிறுவனமான இப்போபே 'IppoPay', ரிஸ்க் மேனேஜ்மெண்ட் ஸ்டார்ட்அப்பான டுடேலரை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியுள்ளது.
பேமெண்ட்ச் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த Aggrepay முன்னாள் சி.இ.ஓ பிரதீப் குமார் என்பவரால் தொடங்கப்பட்ட டுடேலர் 'Tutelar' நிறுவனம், AI-அடிப்படையிலான இடர் இல்லாத ஆன்போர்டிங், KYC மோசடி கண்டறிதல், பரிவர்த்தனை மோசடி கண்டறிதல், தவறான விற்பனையைத் தடுத்தல் மற்றும் பல சேவைகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எச்எஸ்பிசி ஆகியவற்றில் ரிஸ்க் வெர்ட்டிகல்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார் பிரதீப். இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு, இவர் IppoPay இன் தலைமை இடர் அதிகாரியாக (chief risk officer) இணைவார்.
Also Read: இப்போ இல்லனா எப்பவும் இல்ல.. IppoPay ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பிண்ணனி கதை..
இந்த குறித்து பேசிய இப்போபே மோகன் கே, 'டுடெலரை தங்களுடன் இணைப்பதன் மூலம் பணம் செலுத்தும் இடத்தில் ஏற்படும் மோசடிகளை தவிர்ப்பதில் IppoPay -ஐ ஒரு முக்கிய அங்கமாக செயல்படும்' என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…