திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு தருணம். இந்த அழகான தருணத்திற்காக ஒவ்வொரு பெற்றோரும் தங்களது சம்பாதியத்தில் ஒரு பகுதியை சேமித்து வைப்பார்கள். ஆனாலும், இந்த காலத்தில் எவ்வளவு சேமித்தாலும் கடன் வாங்கியே ஆகவேண்டும் அளவிற்கு விலைவாசி ஏறிக்கிடக்கிறது. இதனால், பல வழிகளில் இருந்து கடனை வாங்கி கல்யாணத்தை முடிப்பதற்கு பதிலாக கல்யாணத்திற்கு தேவையான எல்லா செலவுகளையும் தாங்களே செய்து அதன்பிறகு அந்த செலவிற்கான பணத்தை கொடுத்தால் போதும் என்று ஒரு நிறுவனம் கூறுகினால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாங்க. பெங்களூரில் அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு ஷாங்க் கே வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்ட ஒரு திருமண ஃபின்டெக் தளம் (wedding fintech platform) தான் 'மேரி நவ் பே லேட்டர்' (Marry Now Pay Later). இந்த காலத்திற்கு ஏற்ப புதுமையான யுக்தியை கையாண்டு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதனால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
அதாவது திருமண மண்டபம், உணவு ஏற்பாடு, போட்டோ மற்றும் வீடியோகிராபி, அலங்கரிப்பவர், திட்டமிடுபவர் என திருமணத்திற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஆகும் செலவுகளை இந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். திருமணத்திற்கு பிறகு 3,6,9,12,15,18 மற்றும் 24 மாதங்கள் அடிப்படையில் EMI-களாகப் பிரித்து கடனை திருப்பிக் கொடுத்தால் போதும். இது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உண்மையில் புதுமையான யோசனை தான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…