உலக நாடுகளில் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாக அமெரிக்கத் தொழிலாளர் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலையின்மை காரணமாக அரசிடம் உதவித் தொகை கோருவோர் எண்ணிக்கை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதம் உச்சத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பொருளாதார நெருக்கடியால், பேஸ்புக், காயின்பேஸ், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக பணிநீக்கங்களை செய்து வருகின்றனர்.
இப்படி, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் வரை மட்டும் 30,000 க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…