தொழில்முனைவோரை ஆதரிப்பதில் மிகவும் பிரபலமானவர் தொழிலதிபர் ரத்தன் டாடா. தற்போது, இவர் தனது அலுவலகத்தின் மேலாளரான சாந்தனு நாயுடுவால் நிறுவப்பட்ட குட்ஃபெலோஸில் முதலீடு செய்துள்ளார். குட்ஃபெலோஸ் 'Goodfellows' என்பது மூத்த குடிமக்களுக்கான துணை தேடும் நிறுவனமாகும். மேலும், இந்த முதலீடு குறித்த விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
மக்களின் தேவைகளை தான் தற்போது வர்த்தமாகவும், சேவையாகவும் மாறி வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவாக விளங்கும் மூத்த குடிமக்களுக்கான தோழமை உருவாக்கும் சேவையைச் சாந்தனு நாயுடு தனது நிறுவனத்தின் வாயிலாக அளிக்கிறார். மூத்த குடிமக்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் என்று இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்புகளை அர்த்தமுள்ளதாக மாற்றவும், இந்தியாவில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை தீர்க்கவும் உதவும் குட்ஃபெலோஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
Also Read: யார் இந்த சாந்தனு நாயுடு?
மேலும் குட்ஃபெலோஸ் சேவை வெளியீட்டு விழாவில் தொடர்ந்து பேசிய 84 வயதான ரத்தன் டாடா , 'வயதான காலத்தில் நீங்கள் தனியாக நேரத்தை செலவிடும் வரை தனிமையில் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது. அப்போதுதான் தோழமைக்கான தேவைவும் உதவியும் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்வீர்கள்' என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கூறியினார்.
வயதானவர்களின் தனிமையை போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட குட்ஃபெலோஸ் கடந்த ஆறு மாதங்களில் புனேவில் பீட்டா கட்டத்தை நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த முதலீட்டின் மூலம் சென்னை, மும்பை, பெங்களூரு என பிற நகரங்களுக்கும் சேவைகளை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…