தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு ஈரோடு மண்டல மையம் ஸ்டார்ட் அப் பொங்கல் விழாவை நடத்த உள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் இடம், நேரம் மற்றும் முக்கிய நோக்கம் குறித்த விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.
தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையிலேயே இந்த ஸ்டார்ட் அப் பொங்கல் நிகழ்ச்சியும் அமைகிறது. அதே சமயம், இந்த நிகழ்வானது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் விதமாகவும் அமைகிறது.
நடைபெறும் இடம்
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Gobi Arts & Science College),
கோபி செட்டிப்பாளையம்,
ஈரோடு.
தேதி மற்றும் நேரம்
ஜனவரி 11, 2023 காலை 10.00 மணி
நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்
தொழில்முனைவோர்களைக் கொண்டாடவும்,
பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும்,
தொழில் முனைவோர்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தவும்,
உங்கள் நிறுவனத்தை (ஸ்டார்ட் அப்) வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைகிறது.
மேலும் சில தகவல்களுக்கு
இந்த நிகழ்ச்சி குறித்த மேலும் சில தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 74023 52221
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…