தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கவசம் கட்டாயம் என அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி, ராதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
#BREAKING | மீண்டும் வானகரதில் அதிமுக பொதுக்குழு..!
இதனையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் உட்பட இருவருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது அவருடைய மனைவி ராதாவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…