தமிழகத்தில் பரவி வரும் எச்1என்1 காய்ச்சலால் இதுவரை 1,267 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எச்1 என்1 இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகம் பரவுவதாகக் கூறப்படுகிறது.
இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
இந்நிலையில் இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 15 நாட்களில் 6,000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் நேற்று வரை தமிழ்நாட்டில் 5,064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1,267 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…