ஃப்ளு (இன்ஃப்ளுயன்ஸா) என்பது தும்மல் மற்றும் இருமல் மூலம் பரவக்கூடிய ஒரு பொதுவான வைரஸ் தொற்று நோயாகும். இதை பருவகால காய்ச்சல் என்றும் அழைப்பர். இந்த காய்ச்சல் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம், ஆனால் குளிர்காலத்தில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்
இன்ஃப்ளுயன்ஸா வைரஸ்
ஃப்ளு தொற்றை ஏற்படுத்தும் இன்ஃப்ளுயன்ஸா வைரஸில் இன்ஃப்ளுயன்ஸா ஏ, பி, சி என்று 3 வகை உள்ளன. இதில் ஏ மற்றும் பி வகை வைரஸ் சி வகையைவிட இறப்பு விகியத்தை ஏற்படுத்தக்கூடியது.
பன்றி காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்...
யாரை அதிகம் தாக்கும்?
5 வயதிற்குற்பட்ட குழந்தைகள்
65 வயது கடந்த பெரியவர்கள்
குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள்
கர்ப்பிணிகள்
நாள்பட்ட சுவாச நோய் உடையவர்கள்
சுகாதார மையங்களில் பணியாற்றுபவர்கள்
தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
இன்ஃப்ளுயன்ஸா அறிகுறிகள்:
இன்ஃப்ளுயன்ஸாக்கும் சாதாரண சளீக்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் ஃப்ளு சளியை விட வேகமாக வளரும். இந்த காய்ச்சல் வந்து 1 முதல் 3 நாட்களில் அறிகுறிகள் தெரியும்.
வறட்டு இருமல்
தொண்டை வலி
தலைவலி
பசியின்மை
மூக்கடைப்பு
உடல் சோர்வு
உடல் வலி
குமட்டல்
திடீர் காய்ச்சல்
குரங்கு அம்மை நோய் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்..
எப்படி பரவுகிறது?
தும்புதல், இரும்புதல் மற்றும் பேசுதல் மூலம் இந்நோய் எளிதில் பரவும். சில சமயங்களில் வைரஸ் தொற்று பரவியுள்ள இடங்களை தொடுவதாலும் இந்நோய் பரவும்.
குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். சில நேரங்களில் இருமல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
6 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் காய்ச்சல் தடுப்பூசியை போடுவது காய்ச்சல் பரவாமல் தடுக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் இருந்தால், அவருக்கு தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம், ஏனெனில் காய்ச்சல் மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தையின் கைகளை தவறாமல் அடிக்கடி கழுவி விடுங்கள்.
நோயைத் தவிர்க்க முடிந்த அளவிற்கு மற்ற நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோரிடமிருந்து விலகி இருங்கள்.
ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் இப்படி தான் இருக்குமா?
நீங்கள் அல்லது உங்கள் குழந்தை நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டால், முடிந்தவரை விரைவில் கைகளை நன்கு கழுவுதல் (மற்றும் குளிப்பது கூட) நல்லது.
குழந்தைகள் பயன்படுத்தும் அசுத்தமான பொம்மைகள், புத்தகங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களை கிருமிநாசினியால் துடைத்து வைத்திருங்கள்.
காய்ச்சல் நேரத்தில் உங்கள் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்றாலும் கூட, திரவ உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…