இன்னொரு மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் பேசியுள்ளார்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ் எஸ் ராமச்சந்திரன் அவர்களது இல்லத்திருமண விழா சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மணமக்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவை அழிக்க நினைத்தவர்கள், அழிந்து போயுள்ளனர் என்றும், இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும், அந்தப் பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை, தலையிட வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம். நாம் பெருமையுடன் பேசி கொண்டு உள்ளே திராவிட மாடலில் நடைபெறும் திருமணம் இது. அனைவரின் சார்பில் நான் மண மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…