Nandhinipriya Ganeshan February 03, 2023
பொதுவாக இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பெயர்களை வைக்கத் தான் ஆசைப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரே மாதியான முதல் எழுத்து பெயர்களை தான் தேடுவார்கள். இதோ உங்க வீட்டு இளவரசிகளுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள். அதுவும் இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப.
Gowthami Subramani January 18, 2023
குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்திப்பது பொதுவான ஒன்று. இன்னும் சிலர், குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்பதில் குழம்பி இருப்பர். இதில், சில பெற்றோர்கள் குழந்தைக்குப் பெயர் வைக்க ஜாதக ரீதியாக இருக்க வேண்டும் என நினைப்பர். இன்னும் சில பேர், தங்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களின் பெயர்களையும், தமிழ் பெயர், குலதெய்வங்களின் பெயர் என பெயர் வைப்பர்.
Gowthami Subramani January 13, 2023
சிறிய குழந்தைகள் என்று கூறப்பட்டாலும், அவர்களுக்கு இயற்கையாகவே, நுண்ணறிவுத் திறன் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த காலகட்டத்தில் அவர்களின் சில நடவடிக்கைகளிலிருந்தே நுண்ணறிவுத் திறன் மேலும் வளர்வதும், அவற்றிலிருந்து, குறைவதும் அமையும். அந்த வகையில், குழந்தைகளின் புத்திசாலித் தனத்தை வளர்க்கவும், அவர்கள் தவறான தகவல்களைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கவும் செய்ய வேண்டிய சில குறிப்புகளை இதில் காண்போம்.
Vaishnavi Subramani December 27, 2022
பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுப்பது என்பது வழக்கம். ஆறுமாதம் ஆனால் திட மற்றும் திரவ உணவுகள் கொடுப்பது பழக்க வேண்டும்.கடைகளில் விற்கப்படும் உணவுகள் கொடுப்பதால் சத்து இருப்பதாகக் கூறினால் கூட, வீட்டில் செய்யும் உணவு போல் எந்த உணவுகளாலும் சத்துதர இயலாது.
Vaishnavi Subramani December 20, 2022
வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான குளியல் எண்ணெய் மற்றும் குளியல் பொடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் சருமம் மற்றும் கேசத்தை பராமரித்து பாதுக்கவும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Gowthami Subramani December 19, 2022
குளிர்காலம் மற்றும் கோடை காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பு தேவை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இருப்பினும், ஒரு சிலரின் அலட்சியம் காரணமாக குழந்தைகள் பெரும்பாலான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில், குளிர் காலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். மேலும், குளிர் காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், என்னென்ன விஷயங்களை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
Nandhinipriya Ganeshan November 29, 2022
குழந்தைகள் என்றாலே வெகுளியாக தான் இருப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளிடம் ஏதாவது பொருட்களை கொடுக்கும் போது கவனத்தோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அது உணவு பொருளாக இருந்தாலும் கூட. ஏனென்றால், குழந்தைகளுக்கு உணவு பொருட்களை சாப்பிடும்போது ஆர்வம் அதிகம் இருக்கும். இதனால், அதை நன்றாக மெல்லாமலும், அவசர அவசரமாகவும் விழுங்கிவிடுவார்கள். இதனால், விழுங்கப்படும் பொருள் மூச்சுக்குழாய் அல்லது உணவு குழாய்க்குள் சென்றுவிடும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக் கொள்வதுமுண்டு. சில சமயங்களில் இது குழந்தையின் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Nandhinipriya Ganeshan November 26, 2022
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சில சமயங்களில் அவை இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நம்மை ஆச்சர்யப்படவும் வைக்கின்றன. தற்போது, அப்படி ஒரு சம்பவம் தான் மெக்சிகோ நாட்டில் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். நீண்ட நேரம் பிரசவ வழியால் துடித்த அந்த பெண்ணிற்கு, அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, நடந்த ஒரு விஷயம் தான் மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது, அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டு உள்ளது. உருளை வடிவத்தில் இருந்த அந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்டிருந்துள்ளது.
Nandhinipriya Ganeshan November 25, 2022
கொளுத்தும் வெயில் காலத்தில் எப்படா இந்த மழைக்காலமும், குளிர்காலமும் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். அதுவே, மழைக்காலமும் குளிர்காலமும் வந்துவிட்டால் எப்படா இந்த சீசன் முடியும் என்று திட்டுவதும் உண்டு. ஏனென்றால், இந்த சீசனில் குளிர் ஒருபக்கம் வாட்டி எடுத்தாலும், மறுபக்கம் ஏராளமான நோய்த்தொற்றும் வந்து, நம்மை போட்டு பாடாய் படுத்திவிடும். பெரியவர்களாக இருந்தால் கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்த நோய்த்தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரும் சவாலான விஷயம். அதுவும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எந்த காலநிலையாக இருந்தாலும் மிகவும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிவிடுவார்கள்.
Nandhinipriya Ganeshan November 24, 2022
குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய வைரஸ் பாதிப்புகளில் ஒன்று தான் அம்மை. அதிலும், தட்டம்மை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்மை நோய்களில் ஒன்று. ஏன் சிலநேரங்களி உயிருக்கே ஆபத்தாகும் அளவிற்கு கொடியது இந்த தட்டம்மை நோய். அதுமட்டுமல்லாமல், இது எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இந்தநிலையில், தற்போது மும்பையில் திடீரென்று தட்டம்மை ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.