Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைக்குப் பெயர் வைக்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை! | How to Keep Name for Newborn Baby

Gowthami Subramani Updated:
குழந்தைக்குப் பெயர் வைக்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை! | How to Keep Name for Newborn BabyRepresentative Image.

குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்திப்பது பொதுவான ஒன்று. இன்னும் சிலர், குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்பதில் குழம்பி இருப்பர். இதில், சில பெற்றோர்கள் குழந்தைக்குப் பெயர் வைக்க ஜாதக ரீதியாக இருக்க வேண்டும் என நினைப்பர். இன்னும் சில பேர், தங்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களின் பெயர்களையும், தமிழ் பெயர், குலதெய்வங்களின் பெயர் என பெயர் வைப்பர்.

குழந்தைக்குப் பெயர் வைக்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை! | How to Keep Name for Newborn BabyRepresentative Image

குழந்தைக்குப் பெயர் வைப்பது

குழந்தைக்குப் பெயர் வைப்பது என்பது அவர்களின் கல்வி, செல்வம், உயர்வு, புகழ், நோயின்மை போன்றவைக் கிடைக்கப் பெறுவதாகும். குழந்தை பிறக்கும் போது ஆணோ, பெண்ணோ அவர்களுக்கு என்ன பெயர் வைத்தாலும், அதில் இயற்கையின் புனைப்பெயர் அல்லது தெய்வத்தின் புனைப்பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும். இதில் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றி இதில் காண்போம்.

குழந்தைக்குப் பெயர் வைக்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை! | How to Keep Name for Newborn BabyRepresentative Image

எப்படி பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பது

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது மூன்று முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

அதில் முதலாவதாக அமைவது பிறந்த குழந்தையின் நட்சத்திர எழுத்து. அதாவது, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், தனித்துவமான எழுத்துக்கள் இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு அதில் ஒன்றைத் தான், குழந்தைக்கு பெயராக வைக்க வேண்டும். இவ்வாறு, நட்சத்திரத்தில் பெயர் வைத்தால் பாதகங்கள் எதுவும் இருக்காது.

இரண்டாவது தமிழ் சொற்களான நெடிலில் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழில் குறில், நெடில் என இருக்கிறது. இது போல, பெயர்களை வைக்கும் போது நெடிலில் பெயர்களை வைக்க வேண்டும். அதன் படி, பெயர்களின் முதல், இடையில் மற்றும் கடைசியில் கண்டிப்பாக நெடில் சொற்கள் இருக்க வேண்டும். அதே சமயம், அதன் பொருள் தெரிந்து பெயர் வைப்பதும் அவசியம் ஆகும்.

மூன்றாவதாக, குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது ஒரே பெயர் தான் வைக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்