Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

தெரிந்து கொள்ளுங்கள்

10th பாஸ் பண்ணிருந்தா போதும்.. மத்திய அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. | CRPF Recruitment 2023 Apply Online

Nandhinipriya Ganeshan March 20, 2023

CRPF - மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 9223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இப்பகுதியில் காணலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் All Over India-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil

Nandhinipriya Ganeshan March 17, 2023

ரோஸ்மேரி (Rosemary) என்பது வாசனை மிகுந்த பசுமை மாறா மற்றும் ஊசி போன்ற இலைகளை கொண்ட பல ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மூலிகை தாவரம். இந்த மூலிகை வெளிநாடுகளில் அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த செடியின் சிறிதளவு தண்டை பறித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கியினால் நிம்மதியான தூக்கம் வரும். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு ரொம்பவே பயன்படுகிறது. 

வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water Faster

Nandhinipriya Ganeshan March 17, 2023

நாம் வீட்டில் வளர்ப்பதற்காகவே பல விதமான செடிகள் இருக்கின்றன. அவற்றில் அதிர்ஷ்ட செடியாக இருப்பது மணி பிளாண்ட். இந்த செடியை பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பதை பார்த்திருப்போம். ஏனென்றால், இந்த செடி வளரும் வீட்டில் அதிர்ஷ்டம் தேடி வருமாம். பொதுவாக, இந்த செடியை மண்ணில் தான் வளர்ப்பார்கள். ஆனால், இதை வெறும் தண்ணீரிலும் வளர்க்கலாம். என்னாங்க சொல்றீங்க தண்ணீரிலா? ஆம், இந்த செடி தண்ணீரிலும் வளரக்கூடியது. சரி வாங்க, தண்ணீரில் வளர்ப்பது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

TNPSC தேர்வர்களே தயாரா இருங்க.. | TNPSC Group 4 Result 2023 Date and Time

Nandhinipriya Ganeshan March 16, 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. தற்கான முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது மீண்டும் இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தேதியை வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. எனவே இந்தத் தேர்வில் கலந்துகொண்டு முடிவு அறிவிப்பை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் முடிவுக்காக காத்திருங்கள். TN குரூப் 4 முடிவை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீட்டுத் தேதிக்குப் பிறகு ஆன்லைனில் அணுகலாம். சரியான உள்நுழைவு விவரங்களுடன் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். குரூப் 4 ரிசல்ட் 2023 பதிவிறக்கம் செய்வது எப்படி? முதலில், விண்ணப்பதாரர்கள் TNPSC இன் www.tnpsc.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். பிறகு TNPSC குரூப் 4 ரிசல்ட் டவுன்லோட் லிங்க் 2023ஐப் பார்க்கவும். இணைப்பைக் கிளிக் செய்து, உள்நுழைவு சாளரம் திறக்கும் வரை காத்திருக்கவும். இப்போது கொடுக்கப்பட்ட பிரிவுகளில் செல்லுபடியாகும் உள்நுழைவு (login) தேவையானவற்றை உள்ளிடவும். அதன் பிறகு டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது TNPSC குரூப் 4 முடிவுகள் 2023 திரையில் தோன்றும். முடிவு விவரங்களைச் சரிபார்த்து, பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்க. அவ்வளவு இதை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழக அரசின் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி? | Tamil Nadu Govt Free Coaching for Competitive Exams

Nandhinipriya Ganeshan March 15, 2023

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் TNPSC, IBPS, SSC, RRB போன்ற போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளன. எனவே, TNPSC, IBPS, SSC, RRB போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பான வெளியியப்பட்டுள்ள செய்தி குறிப்பில், TNPSC மற்றும் IBPS, SSC, RRB ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தழிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சிகல் வழங்கப்படுகிறது. தற்போது, மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, புதிதாக இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

பணக் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் சேர வியாழக்கிழமையில் இத பண்ணுங்க.. | Guru Bhagavan Viratham

Nandhinipriya Ganeshan March 14, 2023

ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் செயல்பாடுகளை பொருத்து தான் ஒருவரின் ஜாதகம் அமைகிறது. அதேபோல், ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில், நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் அள்ளிக் கொடுப்பதில் வள்ளலாகத் திகழ்கிறார். பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கு ஒரு உகந்த நாள் இருக்கும். அதுபோல குருபகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. 16 வளர்பிறை வியாழக்கிழமை உரிய முறையில் விரதம் இருந்து குருபகவானை வழிபாடு செய்தால், குருபகவானின் முழு அருளையும் பெறமுடியும் என்பது ஐதீகம். சுமார் 3 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குருபகவானின் பூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.

காரடையான் நோன்பன்று தாலி கயிறு மாற்றுவது எப்படி? | How to Change Thali Kayiru in Karadaiyan Nombu

Nandhinipriya Ganeshan March 13, 2023

மாங்கல்ய பலம் நீடிக்க பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களிலேயே முதன்மையான விரதம் இந்த காரடையான் விரதம். இதை காமாட்சி விரதம், சாவித்திரி விரதம், கௌரி விரதம் என்றும் சொல்வார்கள். எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனான சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரத்தைப் போற்றவும், உயிருடன் வாழும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எந்தவித குறையுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த சாவித்ரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட மனதிற்கு பிடித்த நல்ல கணவர்கள் அமையவும் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in Tamil

Nandhinipriya Ganeshan March 11, 2023

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் இயற்கையாக உடலில் நடக்கும் மாற்றங்களால் வரக்கூடியது. இந்த மாதிரியான நாட்களில் பெண்கள் வெளியில் செல்ல விரும்பவே மாட்டார்கள். ஏனென்றால், ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமாக அசௌகரியங்கள் இருக்கும். இதனால், வீட்டில் இருக்கவே விரும்புவார்கள். ஆனால், மாதவிடாய் வரப்போகும் நாட்களில் முக்கிய விழாக்கள், கோவில் பண்டிகைகள் போன்றவை வந்தால் மாதவிடாயை தள்ளிப்போடவே நினைப்பார்கள். இதற்காக கடைகளில் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. | Thaipoosam Valipadu Murai in Tamil

Nandhinipriya Ganeshan February 03, 2023

தை மாதத்தில் பௌர்ணமியும் பூசம் நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாளே 'தைப்பூசம்'. இந்த மங்களகரமான நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல்; குறிப்பாக, பழனியில் அதிவிஷேசமாக பக்தர்கள் பாதையாத்திரையாக நடந்து சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தல் என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய இந்த தைப்பூச திருநாள் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வருகிறது. சரி வாங்க, தைப்பூசத்தன்று முருகனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மொறு மொறு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் செய்வது எப்படி? | How to Make Crispy Potato Sticks at Home

Nandhinipriya Ganeshan January 23, 2023

நம்மில் பலருக்கும் உருளைக்கிழங்கில் செய்யும் ரெசிபி என்றாலே ரொம்ப பிடிக்கும். அதிலும், சாப்பிடுவதற்கு மொறு மொறுப்பாக இருந்தால் அளவே இல்லாமல் சாப்பிடுவோம். ஆனால், பெரும்பாலும் உருளைக்கிழங்கில் செய்யும் ஸ்நாக்ஸ் அனைத்துமே கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். இனி கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதுவும் மாலை நேரத்தில் என்ன ஸ்நாக்ஸ் செய்து தரலாம் என்று குழப்பும் இருக்காது. சரி, வாங்க உருளைக்கிழங்கை வைத்து செய்யும் உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் (Potato Sticks) வீட்டிலேயே மொறு மொறுப்பாக செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்க்கலாம்.