முழு முதற்கடவுளாய், அனைவரின் இன்னல்களையும் தீர்த்து, எல்லோருக்கும் நன்மை அளிப்பவனாய் இருப்பவனே விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில், மிகச் சிறந்த நாளாக அமைவது விநாயகர் சதுர்த்தி தினம் ஆகும். இந்த தினத்தில், பொதுவாக, இலைகள், பழங்கள், மலர்கள் என ஒவ்வொன்றையும் 21 வகைகளில் படைக்கப்பட்டு விநாயகப் பெருமானை வணங்கினால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
இறைவனுக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளும் பல்வேறு நன்மைகளைத் தருபவையாக உள்ளன. அந்த வகையில், படைக்கப்படும் உணவுகள் நமக்கு மருந்தாகவே உள்ளது. அந்த வகையில், விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் 21 இலைகள், 21 மலர்கள், 21 பழங்கள் போன்றவற்றைப் பற்றிக் கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம். இந்தப் பதிவில், விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்குப் படைக்க வேன்டிய 21 இலைகளின் வகைகளைப் பற்றிக் காண்போம்.
இந்த 21 வகையான பச்சிலைகளை வைத்து வழிபட, நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறி, சிறப்பான பலன்களைப் பெற முடியும். அதே போல, இதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு இலையும் ஒரு சிறப்பான பலனைத் தருவதாக உள்ளன.
முல்லை இலை
வில்வ இலை
அருகம்புல்
கரிசலாங்கண்ணி இலை
இலந்தை இலை
ஊமத்தை இலை
கண்டங்கத்தரி இலை
வன்னி இலை
நாயுருவி இலை
அரளி இலை
எருக்கம் இலை
மருத இலைகள்
மாதுளை இலை
தேவதாரு இலை
மரிக்கொழுந்து இலை
விஷ்ணுகிராந்தி இலை
அரச இலை
தாழம்பூ இலை
ஜாதிமல்லி இலை
அகத்தில் இலை
தவனம்
இந்த ஒவ்வொரு இலைகளையும், விநாயகருக்கு படைத்து வழிபடுவதன் மூலம், நல்ல சிறப்பான பலன்களைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…