விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விநாயகப் பெருமானின் முழு அருளையும் பெறுவதற்கு விநாயகருக்குப் பிடித்த இந்த 21 பழங்களைப் பூஜையில் படைக்க வேண்டும். எல்லாக் கடவுள்களுக்கும் முழு முதற் கடவுளாய் வணங்குபவர் விநாயகப் பெருமான். பல்வேறு வகையான பெயர்களை உடைய இந்த கணேச மூர்த்தியின் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வளமும், நலமும் பெற இந்த 21 வகையான பழங்களை வைத்து படைப்பது மிகச் சிறந்தது. நம்முடைய வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களையும், வினைகளையும் நீக்குபவராய் நம்மைப் பாதுகாக்கும் விநாயகப் பெருமானுக்கு இந்த 21 பழங்களும் விநாயகப் பெருமானுக்கு உகந்த பழங்களாகும்.
விநாயகப் பெருமானுக்கு உகந்தவை
வாழ்வில் வெற்றியை அளித்து, தீமைகளை ஒழித்து, வாழ்நாள் முழுவதும் ஹம்மை இரட்சிக்கும் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாள் விநாயகர் சதுர்த்தி. இந்த சதுர்த்தி தினத்தன்று, விநாயகருக்கு உகந்த இருபத்து ஒரு மலர்கள், இருபத்து ஒரு இலைகள், மற்றும் இருபத்து ஒரு பழங்களை வைத்து வழிபடுவர். இதன் மூலம் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை உண்டாகும்.
இலைகள், மலர்கள் மற்றும் பழங்களில் எத்தனையோ வகைகள் இருப்பின், இந்த 21 இலைகள், 21 மலர்கள், 21 பழங்கள் விநாயகப் பெருமானுக்கு உகந்ததாகும்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த 21 இலைகள்… இன்னல்கள் அனைத்தும் நீங்க இப்படி வழிபடுங்கள்…
இருபத்து ஒரு பழங்கள்
நமது ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், ஏராளமான மூலிகைச் செடிகள், மலர்கள், கொடிகள் இலைகள் போன்றவற்றை நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் நோக்கத்திலும், சடங்குகள், பூஜைகள் உள்ளிட்டவற்றில் படைப்பதற்கான வழிமுறைகளை விட்டுச் சென்றுள்ளனர். அதன் படி, விநாயகப் பெருமானுக்குப் படைக்க வேண்டிய 21 பழங்களின் வகைகள் குறித்து காணலாம்.
விநாயகருக்குப் பிடித்தவற்றை நாம் படைத்து, மனமுருகி வழிபட்டால் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விலகி ஆரோக்கியத்துடன், சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மாம்பழம்
பலாப்பழம்
வாழைப்பழம்
எலந்த பழம்
பிறப்பம் பழம்
நாவல் பழம்
சாத்துக்குடி
கொய்யா பழம்
மாதுளை
அன்னாச்சி பழம்
சப்போட்டா
சீதாப்பழம்
விளாம்பழம்
திராட்சை
பேரிக்காய்
கரும்பு
அத்திப்பழம்
சோளம்
உலர் பழங்களான முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை உள்ளிட்டவை
கமலா ஆரஞ்சு
பேரிச்சம்பழம்
விநாயகப் பெருமானுக்கு இந்த மலர்களைக் கொண்டு பூஜியுங்கள்… உங்கள் வாழ்வில் செல்வமும், வளமும் மென்மேலும் பெருகும்….
மேலே குறிப்பிட்ட 21 பழங்களை வைத்து விநாயகர் சதுர்த்தி சிறப்பான நாளில் வழிபட்டால், எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும். வாழ்வில் வளம் பெருகுவதுடன், விநாயகப் பெருமானின் பேராற்றல் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…