Navaratri Flowers List in Tamil: மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களை கொடுமை செய்து வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றிக்கண்ட விழாவினை தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவானது 9 நாட்கள் தொடர்ச்சியாக அம்மனுடைய உருவங்களை வைத்து வழிபாடு செய்வதாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை 'மகா நவராத்திரி' என்று அழைப்பர். அன்னை சக்தி தேவியின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டும் விதமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, நம் கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவானது, செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதியில் முடிகிறது.
நவராத்திரியில் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்
மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி போன்ற அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் இந்த ஒன்பது நாட்களில் முதல் 3 நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள் சக்தி தேவி.
இந்த ஒன்பது நாட்களிலும் சக்தி எந்த ரூபத்தில் நமக்கு காட்சி கொடுப்பாள் என்பதையும், பூஜிக்க வேண்டிய மலர்களை பற்றியும் பார்க்கலாம்.
முதல் நாள்:
அன்னை மகேஸ்வரியாக காட்சி கொடுக்கும் சக்தி தேவிக்கு மல்லிகை, வெண்தாமரை, செந்தாமரை, வில்வம் இலை வைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரி கொலு வைப்பது எப்படி?
இரண்டாம் நாள்:
கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, துளசி வைத்து வழிபட வேண்டும்..
மூன்றாம் நாள்:
வராகியாக காட்சி கொடுக்கும் சக்தி தேவிக்கு செண்பகம், சம்பங்கி, மரிக்கொழுந்து வைத்து வழிபட வேண்டும்.
நான்காம் நாள்:
மகாலட்சுமியாக காட்சியளிக்கும் தேவிக்கு, ஜாதி மல்லி மற்றும் மணமுள்ள பூக்களை வைத்து வழிபட வேண்டும்.
ஐந்தாம் நாள்:
வைஷ்ணவி தேவி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லைப்பூ வைத்து வழிபட வேண்டும்.
ஆறாம் நாள்:
இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு செம்பருத்தி மற்றும் சிவப்பு நிறமுள்ள மலர்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
ஏழாம் நாள்:
சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
எட்டாம் நாள்:
நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தரும் அம்பிகைக்கு ரோஜா பூ வைத்து வழிபடலாம்.
நவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்..
ஒன்பதாம் நாள்:
சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள், இன்றைய நாள் செந்தாமரை மற்றும் வெண்தாமரை அலங்கரித்து பூஜை செய்யலாம்.
பத்தாம் நாள்:
விஜயம் என்றாலே வெற்றி. தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…