சபரிமலை வாசன் ஐயப்பன் அருள் பெற பக்தர்களாகிய நாம் கார்த்திகை மாதம் மாலையிட்டு ஒரு மண்டலம் விரதம் இருந்து அய்யனைக் காண்போம். கார்த்திகை முதல் நாள் முதல் புலி வாகனன் மணிகண்டனைக் காண ஒரு மண்டலம் விரதம் இருந்து கன்னி சாமி முதல் குரு சாமி பக்தி உடன் சபரி மலை நோக்கி புறப்படுவோம். நாம் ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் இருக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்னவென்று கீழ்க்காணவும்.
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
மனித பிறவிகளாகிய நாம் அறிந்து அறியாமலும் பல தவறுகள் செய்கிறோம். நாம் செய்த வினைப்பயன் நிச்சியம் நமக்கு கிடைக்கும் என்பது தான் இயற்கை ஆகும். இந்த தத்துவமே ஒவ்வொரு யுகத்திலும் பின்பற்றப்படுகிறது.
கலியுகத்தில் நமக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்கள் மற்றும் ஆபத்திலிருந்து காப்பாற்றும் மனிதராகத் தோன்றி வாழ்ந்த கடவுள் மணிகண்டன் ஒருவனை நம்மை காப்பார் என்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…