மகா சிவராத்ரி அன்று முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் சிவபெருமானை மனதில் நினைத்து பிராத்தனை செய்வதன் மூலம் நமக்கு முக்தி கிடைக்கும். மேலும் அவரின் மனம் குளிர்ந்து நாம் வேண்டியதை வரமாக கொடுக்கும் அற்புதமான நாள் தான் மகா சிவராத்ரி. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மகா சிவராத்ரி நாளில் எந்தெந்த ராசியினர் எந்தெந்த பொருளை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பாப்போம்.
மகா சிவராத்ரி அன்று வெல்லம் கலந்த நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, வெல்லம் சேர்த்த உணவை படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
தயிரைக் கொண்டு மகா சிவராத்ரி அன்றி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதால் உங்களுக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடிகள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
சிவலிங்கத்திற்கு கரும்புச் சாறை கொண்டு மகா சிவராத்ரி அன்று அபிஷேகம் செய்வதனால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி வெற்றியை காணிவீர்கள்.
சக்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் மற்றும் மந்தாரைப் பூவால் அலங்காரம் செய்து வழிபடுவதால் அனைத்து ஆசைகளும் கூடிய விரைவில் நடக்கும்.
மகா சிவராத்ரி அன்று சிவலிங்கத்திற்கு சிவப்பு சந்தனம் கலந்த பாலைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு ஏற்படும் துரதிஷ்டங்கள் நீங்கி அதிஷ்டம் கை கூடி வரும்.
முதலில் சிவலிங்கத்திற்கு பால் பயன்படுத்தி அபிஷேகம் செய்யவும். பின்னர் நீரால் மீண்டும் அபிஷேகம் செய்து மனதார பிராத்தனை செய்யவும். இதனால் உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மேம்படும்.
செல்வ செழிப்பான வாழ்க்கையை பெறுவதற்கு மகா சிவராத்ரி அன்று தூய்மையான பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மன உளைச்சலில் இருந்து விடுபட சிவலிங்கத்திற்கு தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.
மகா சிவராத்ரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும். பின்னர் சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை படிப்பதால் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் விலகும்.
சிவலிங்கத்திற்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தை படைத்தது மனதார பிராத்தனை செய்வதன் மூலம் எல்லா விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள்.
இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் நிகழும். மேலும் நல்ல லாபம் கிட்டும்.
மகா சிவராத்ரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து செல்வ செழிப்புடன் வாழ அருள் கிடைப்பதாக ஐதீகம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…