சாதாரணமாக, நம் வீட்டில் பல்லி கண்டுவிடுவது என்பது வழக்கம். அது என்ன இந்த அட்சய திருதி நாளில் பல்லி பார்ப்பது. அந்த நாளன்று பல்லி கண்ணுக்கு தெரியாதா.? அட்சய திருதியை நாளில் பார்த்தால் என்ன பயன்கள் கிடைக்கும்? போன்ற கேள்விகள் அனைத்திற்கும் இந்தப் பதிவில் விடைகளைக் காணலாம்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அதாவது, அமாவாசைக்குப் பின், அட்சய திருதியை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஆனால், இந்நாளில் தான, தர்மங்களை குறைவில்லாமல் செய்வதன் மூலம் நம்முடைய பாவங்கள் விலகி, நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவர்.
அட்சய திருதியை நாளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த தினத்தில் தான் பகவான் பரசுராமர் அவதரித்த நாளாகும்.
குசேலர், கிருஷ்ண பகவானைச் சந்தித்த தினமும் இன்று தான்.
அன்னபூரணி தேவி அவதரித்த தினம் இந்த அட்சய திருதியை நாளில் தான்
பாண்டவர் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரத்தைப் பெற்ற தினம்.
செல்வத்திற்கு அதிபதியான குபேரன் செல்வத்தை இழந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குபேரன் இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீட்ட தினம் இன்று.
அட்சய திருதியை தினத்தில் மட்டும் பல்லிகள் யார் கண்ணிற்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும். ஏனெனில் சாஸ்திரங்களின் படி, வாஸ்து பகவான் இந்த ஒரு நாள் மட்டும் பல்லிகள் யார் கண்ணிற்கும் படாமல் ஒளிந்து கொள்ள கட்டளை இடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாஸ்து பகவானின் கட்டளைக்கு இணங்க, வீட்டில் உள்ள பல்லிகள் அனைத்தும் ஒளிந்து கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த தினத்தில் மட்டும், வீட்டில் உள்ளவர்கள் பல்லியைக் காண முடியாது எனக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் தாண்டி, இந்த தினத்தில் பல்லியைப் பார்த்து விட்டால், உங்களுடைய ஏழு ஜென்மங்கள் பாவங்கள் அனைத்தும் விலகி பிடித்த தரித்திரம் அனைத்தும் விலகி விடும். எனவே, இந்த தினத்தில், பல்லியைக் கண்களுக்குக் காட்ட வேண்டும் என வாஸ்து பகவானை வேண்டிக் கொள்ளுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…