மனிதனின் ராசியை தீர்மானிப்பது அவன் மண்ணில் ஜனிக்கும்போது அந்த நாள் நட்சத்திரத்தில் உள்ளதோ அதுவே ஒருவரின் நட்சத்திரமாக மாறும். இந்த 27 நட்சத்திரங்களை வைத்து ஜோதிடத்தில் ஒருவரின் ராசியைக் கணிக்கலாம், 27 நட்சத்திரத்தில் 12வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்த திருக்கோயில் செல்ல வேண்டும் என்பது இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் தோன்றுவதை நேருக்கு நேர் பேசும் குணம் கொண்ட உத்திரம் நட்சத்திரக்காரர்கள் சுயகௌரவத்திற்கு அதிகம் மதிப்பு அளிக்கக்கூடியவர். பொதுவாக சமுக சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்சியில் உள்ள அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் கோயிலுக்கு செல்வது நன்மை ஆகும்.
கிழக்கு நோக்கிய மூலவரும் தெற்கு நோக்கிய அம்மையாரும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்குவதால் சுகபோக வாழ்க்கை கிடைக்கும். பொதுவாக வாக்கில் நாணயம் கொண்ட உத்திர நட்சத்திரக்காரர் இத்திருக்கோயில் வந்து இறைவன் தரிசித்தால் மாங்கல்ய மங்கள வரம் கிடைக்கும்.
திருமண தடை, தீராத கால் வலி போன்ற பிரச்சனை இத்திருக்கோயில் வந்து ஈசனின் அருள் பெற்றால் முக்கியமாக உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அடிக்கடி இந்த திருக்கோவில் வந்து இறைவனை வணங்கி வந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் கோயில் செல்ல திருச்சி சத்திரம் வர வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ பயணித்தால் லால்
கோயில் நேரம்:- காலை 8:00- மதியம் 12:00 மணி; மாலை 6:00 மணி- இரவு 8:00 மணி
தொடர்புக்கு:- 91 431 254 4070, 98439 51363
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…