இந்து சாஸ்திரங்களின்படி பிரம்மதேவன் தன்னுடைய படைப்புத்தொழில் தொடங்கிய நாளை தான் உகாதி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இத்தகைய சிறப்புமிக்க நாளில் செய்யும் சுபகாரியங்களுக்கு நாள், நட்சத்திரம் கூட பார்க்க தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், கலியுகம் தொடங்கிய நாளாகவும் இந்த நாள் தான் சொல்லப்படுகிறது.
யுகாதி என்றால் என்ன?
தமிழ், மலையாள மாதங்கள் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு அல்லது உகாதி என்று சொல்லுவார்கள். இந்த உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கொண்டு, யுகாதி அல்லது உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகை கொண்டாடுவார்கள்.
வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து கலவையாக சமைப்பதே உகாதி பச்சடி. தமிழ் புத்தாண்டை போலவே உகாதி புத்தாண்டிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் வீட்டில் கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும். இந்த உகாதி பண்டியை சில வாழ்த்துக்களை பகிர்ந்தும் கொண்டாடுங்கள்.
யுகாதி பண்டிகை 2023 எப்போது?
பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 22 ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 12.01 மணியுடன் அமாவாசை திதி முடிந்து விடுகிறது. இரவு 10.24 வரை பிரதமை திதியும் அதன் பிறகு துவிதியை திதியும் உள்ளது. நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளதால் மார்ச் 22 ம் தேதி யுகாதி தினமாக கணக்கிடப்படுகிறது.
என்றுமே இல்லத்தில் இன்பமழை
பொழிய இனிய தெலுங்கு
வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்!!
பிரம்மன் உலகத்தை படைத்த நாளான
யுகாதியில் இன்னல்கள் நீங்கி
இன்பம் சேர்க்கட்டும்..!!
அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பு
மற்றும் யுகாதி தின வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…