கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொட்டம்குளக்கரா தேவி கோவில் இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் 'சமய விளக்கு' திருவிழா நடைபெறும். நாட்டில் நடக்கும் வினோதமான திருவிழாக்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. அட ஆமாங்க, இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக செல்வார்களாம். ஆனால், உண்மையில் அது பெண்கள் அல்ல ஆண்கள். இதுதான் இத்திருவிழாவின் சிறப்பம்சமே.
இக்கோயிலில் இருக்கும் பகவதி அம்மன் சுயம்புவாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தெய்வமாக இருப்பதால், சாதி, மத பாகுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் இந்த சமய விளக்கு திருவிழா நடைபெறும்.
கடைசி இரண்டு நாட்களில் இரவு முழுவதும் சமய விளக்கு திருவிழா, அம்மன் ஊர்வலம் ஆகியவை நடைபெறும். அப்போது அருள் வேண்டி கேரள மாநிலம் முழுவதிலும் இருந்து ஆண்கள் சாதி, மதம் போன்ற எவ்வித பாகுபாடையும் பாராமல் இக்கோயிலுக்கு வந்து பெண்கள் போல் புடவை அணிந்து, பூ சூடி, ஒப்பனைகள் செய்துக் கொண்டு கைகளில் பாரம்பரிய முறையில் ஐந்து திரியிட்ட விளக்குகளையும், மலர்களையும் ஏந்தியபடி ஊர்வலம் வருவார்கள்.
இவ்வாறு வழிபடுவதால் தொழில், வேலை சிறப்பாக அமையும். செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல், கூவாகம் திருவிழாவை போன்று இங்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பாக பெண் வேடம் அணிந்தவருக்கு பரிசு வழங்கப்படுகிறது.
அப்படி, இந்த திருவிழாவிற்காக பெண்கள் போல் வேடமிட்ட சில ஆண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியாத அளவிற்கு அழகு தேவைகள் போல் ஜொலிக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…