தமிழ், மலையாள மாதங்கள் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு அல்லது உகாதி என்று சொல்லுவார்கள். இந்த உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கொண்டு, யுகாதி அல்லது உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகை கொண்டாடுவார்கள்.
வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து கலவையாக பச்சடி சமைப்பது உகாதி பச்சடி. தமிழ் புத்தாண்டை போலவே உகாதி புத்தாண்டிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் வீட்டில் கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும். இதோ உங்க வீட்டு வாசலை மேலும் வண்ணமையமானதாக மாற்ற அழகிய உகாதி ரங்கோலி கோலங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…