ஆதிசங்கரர் ஆன சிவனின் பாதியாகக் கருதப்படுபவளே அம்மன். பரம்பொருளின் அம்சமாக விளங்கும் அம்பாள், பல வகையான ரூபங்களின் காட்சி தருவார். அதில் ஒன்றாக விளங்குவதே வராஹி அம்மன். சமயபுரம் மாரியம்மன், காஞ்சி காமாட்சியம்மன் என எத்தனையோ அம்மன் படங்களை நாம் வீட்டில் வைத்து வழிபட்டிருப்பினும், வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். இந்த சந்தேகத்திற்கான முக்கிய காரணம் அம்மனின் விசித்திர தோற்றமே. தீயோர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்கு வராஹி அவதாரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
வராஹி அம்மனை வேண்டி வழிபட்டால், எல்லா துன்பங்களும் நீங்கி நன்மை பிறக்கும் எனக் கூறுவர். ஆனால், வாராஹி அம்மன் தோற்றத்தைக் கண்டு, வீட்டில் வைத்து வழிபடுவதற்கு சந்தேகமாக இருக்கும். தவறு செய்பவர்களையே வாராஹி அம்மன் அழிப்பார். முனிவர்களைக் கொடுமைப்படுத்தி வாட்டி வதக்கிய அசுரர்களை அழிப்பதற்கு வராகி அவதாரம் எடுத்து அவர்களை அழித்தார். இதனுடன், தவறு செய்யாதவர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவள் வாராஹி அம்மன்.
வராஹி அம்மன் பன்றி உருவத்தில் காணப்படுவார். எட்டுக் கைகளைக் கொண்டிருக்கும் வராஹி அம்மன், ஒவ்வொரு கைகளிலும் சங்கு, சக்கரம், கலப்பை, படி உள்ளிட்டவற்றை வைத்திருப்பர். மஹாலட்சுமியின் அம்சமாக விளங்குபவரே வராஹி அம்மன். மகாலட்சுமிக்கு சிவப்புத் தாமரை மிகவும் சிறப்பானது. அது போல, வராஹி அம்மனுக்கும் சிவப்புத் தாமரை என்பது உகந்ததாகக் கூறப்படுகிறது.
அரக்கனான இரண்யாட்சன் முனிவர்கள், தேவர்கள், மக்கள் என அனைவரையும் தனது அகங்காரத்தால் கொடுமைப்படுத்தி வந்தான். எல்லை மீறிய அவனது ஆணவம் பூமா தேவியைத் துன்புறுத்தும் நிலைமைக்கு வந்து விட்டது. பிறகு, பூமா தேவி விஷ்ணு பகவானைச் சந்தித்து பூலோகத்தையும், மக்களையும் காப்பாற்றும் படி வேண்டினார். கொடிய அரக்கனான இரண்யாட்சனை அழிப்பதற்கு பெருமாள் வராஹி அவதாரம் எடுத்தார் என்று கூறலாம்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர் வராஹி அம்மன் என்றே கூறலாம். நல்லோர்களை, ஆபத்தில் இருந்து காக்கும் சக்தி வராஹி அம்மனுக்கு உள்ளது. எனவே, நமது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை தீர்த்து வைக்கும் சக்தியும் வராஹி அம்மனுக்கு உண்டு என்றே கூறலாம்.
தீயோர்களை அழித்து நல்லோர்களைக் காக்கும் வராஹி அம்மனை வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம். நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வராஹி அம்மனை வேண்டி வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…