PM Kisan Scheme: PM கிசான் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ரூ. 2000 அவர்களது வங்கிக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்க அக்கவுண்டில் தொகை வந்து விட்டதா என்பதைக் கீழே கொடுக்கப்பட்ட முறைகளின் மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்தத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஷிம்லாவில் நடைபெற்ற நிகழ்வின் போது வெளியிட்டார். இந்தத் திட்டத்தைப் பற்றியும், எவ்வாறு பயன் பெறலாம் என்பது பற்றியும் இந்தப் பதிவில் காணலாம் (PM Kisan Scheme).
கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Scheme)
நாட்டில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையிலும், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், அரசின் திட்டத்தின் படி. மானியங்கள் வழங்கப்பெறுகின்றன. மேலும், அவர்களுக்கு வேளாண் செய்யும் இயந்திரங்களுக்கான மானியத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விவசாயிகளுக்குப் பண உதவி வழங்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வரக் கூடிய விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது (PM Kisan Samman Nidhi Scheme Tamil).
பிரமத மந்திரியின் அமோக திட்டம்… விவசாயிகளின் அக்கவுண்டில் ரூ.18,000 கோடி….! இத மட்டும் பண்ணுங்க.
மூன்று தவணைகளாக
இந்தத் திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு அளிக்கக் கூடிய ரூ. 6000 தொகை வருடந்தோறும் வழங்கப்படுபவையாகும். அதன் படி, நான்கு மாதங்களுக்கு வீதம் ரூ. 2000 என மொத்தம் மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது (Farmers Scheme in Tamil).
அதன் படி, இந்தத் திட்டம் தொடங்கிய பின், இதுவரை 2000 ரூபாய் பத்து தவணைகளாகப் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்த தவணை
இதுவரை 10 தவணைகள் முறையில் ரூ. 2000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆவது தவணை மே மாதம் 31 ஆம் நாள் வழங்கப்படும் என மத்திய அரசு இதற்கு முன்னரே அறிவித்திருந்தது. இதனை எதிர்பார்த்து, விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர் (Farmers Schemes in Tamilnadu).
விழாவில் வெளியிட்ட தொகை
மத்திய அரசு கூறிய படி, நேற்று ஷிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு, இத்திட்டத்தி கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையின் படி, 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் PM Kisan திட்டத்தின் மூலம் பங்கு பெற்றுள்ளனர். மேலும், அவர்களுக்கு 21,000 கோடி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில், பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகளுக்கு அனுப்பபடும் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டது.
அரசு வெளியிட்ட புதிய திட்டம்…! இனி விவசாயிகளுக்குக் கவலை இல்லை…!
அக்கவுண்டில் பணம் வந்ததா என்பதை எப்படி சரிபார்ப்பது? (Schemes For Farmers in Tamilnadu)
விவசாயிகளின் நலனுக்காக, மத்திய அரசு வெளியிட்ட தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதா என்பதைக் கீழ்க்கண்ட படிகளின் படி தெரிந்து கொள்ளலாம் (How to Check Amount on PM Kisan Scheme).
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…