சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
4 கிரகங்களின் சஞ்சாரத்தால் பாதி பேருக்கு இரவில் தூக்கம் என்பதே வராது. மாமனார், மாமியர் அல்லது அப்பா, அம்மா உடல்நிலைகளில் பாதிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சனை வரலாம். குறிப்பாக, கால் பாதம் மற்றும் தலையில் கவனமாக இருக்க வேண்டும். எனவே வண்டி, வாகனத்தில் செல்லும் போது நிதானம் மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு முடி சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
பணியிடத்தில் வேளைபளு அதிகரித்து காணப்படும். உடன்பணிபுரிபவர்களால் சிக்கல் ஏற்படும். இதனால் வேலை பறிப்போகவும் வாய்ப்புள்ளது. எனவே, அனாவசிய பேச்சை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்பாரா தண்டச் செலவுகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில் பெரிய அளவில் முதலீடு செய்தாலும் பெரிய லாபம் கிடைக்காது. இதனால், பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…