மார்கழி மாதம் ராசிநாதன் புதன் சூரியன் உடன் இருப்பது சிறப்பான பலன் அளிக்கும். உங்கள் ராசிக்கு 2 இல் கேது, 3 இல் இருந்து 4 இல் புதன் சூரியன் சுக்கிரன் சேர்க்கை மாறுகிறது, 5 இல் சனி மற்றும் 7 இல் குரு, 8 இல் இராகு, 9 இல் செவ்வாய் சஞ்சாரம் கொள்கிறது. இவ்வாறு இருக்கும் கிரக நிலை அளிக்கும் பலனைக் கீழே காண்போம்.
மார்கழி மாத ராசிபலன் 2022- கன்னி (Margazhi Month Tamil Rasi Palan 2022 Kanni)
பொது பலன்:
உங்கள் ராசிநாதன் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது உங்களை சாதுரியமாக செயல்பட வைக்கும். தொழிலில் புதிய மாற்றம் பிறக்கும். வீட்டில் நிம்மதி இருக்கும். பேச்சினை குறைத்து கொண்டால் தேவையற்ற வம்பு வழக்குகளுக்கு உருவாகாது.
குடும்ப வாழ்க்கை:
வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பல நாட்களாக திருமண தடையில் இருந்த கன்னி ராசிக்காரர்கள் திருமண பேச்சு வார்த்தை செய்வது சாதகமாக அமையும். 9 இல் செவ்வாய் இருந்து 3 ஆம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7 இல் குரு, 4 இல் புதன் மற்றும் சுக்கிரன் இருப்பதால் அன்பாக நடந்து கொள்ளுவீர்.
தொழில்:
பல நாட்களாக எதிர்பார்த்த தொழில் மாற்றம் உண்டு. புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதும் செவ்வாயின் பார்வை 3 இல் விழுவது சிறப்பான பலன் அளிக்கும். கேது 2 ஆம் வீட்டில், இராகு 8 ஆம் வீட்டில் இருப்பதால் தேவையற்ற பேச்சு வார்த்தையை வளர்த்து கொள்ள வேண்டாம். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது.
உடல்நலம்:
9 இல் இருக்கும் செவ்வாய் உடல்நலத்தில் பல தொந்தரவு அளிக்கும். 8 இல் இராகு இருப்பதால் மன அழுத்தம் உண்டாகும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை மேம்படும்.
சந்திராஷ்டமம்:
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, 2
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…