Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.. | Meenam Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.. | Meenam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும்  ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மீன ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.. | Meenam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

மீனம் ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025: 

எப்போதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை கவரக்கூடியவர்கள் மீனம் ராசியினர். நீங்க வரும் நாட்களில் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பதும், சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். 

நீண்ட நாட்களாக வாங்க நினைத்த நவீன பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும்.  தொலைதூர பிராயணங்களை தவிர்க்கவும். 

பணி/வேலை:

உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடம் மாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும், முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. அரசியல்வாதிகளை பொறுத்தவரை,  மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.  கலைஞர்களுக்கு உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.. | Meenam Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

தொழில்/வியாபாரம்:

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சில சிக்கல்கள் வந்து சேரும். 

அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விலைப் பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். 

உடல் ஆரோக்கியம்:

மனைவி பிள்ளைகளுக்கு உண்டாகக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதும் நல்லது.

குடும்பம் வாழ்க்கை:

பெண்களுக்கு கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதும், கணவர் வழி உறுப்பினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூல பலன்களை அடைய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும்.

மாணவ மாணவியர்கள் கல்வியில் கவனமாக செயல்பட்டால் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்பது

அதிர்ஷ்டக் கிழமை: வியாழன், ஞாயிறு, 

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் சிவப்பு 

பரிகாரம்:

பரிகாரமாக விநாயகரை வழிபடுவதும், செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது. கருப்பு எள், போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது மிகவும் நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்