பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் கடக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
உங்க ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால், இந்த மாதத்திலிருந்து கடன் தொல்லை இருக்காது. உடல்நலத்தில் இருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற மனை, வீடு விற்பனை படிபடியாக விலகும். மந்தமாக இருந்த வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான யோகமும் உண்டு. உடன்பிறந்தவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. திருமண வயதில் இருக்கும் கடக ராசியினருக்கு கண்டிப்பாக திருமணம் கைகூடி வரும்.
சிலருக்கு தகப்பனார்வழி பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். குறிப்பாக வாழ்க்கையின் திருப்புமுனையாகவும் இந்த மாதம் இருக்க போகிறது. இருப்பினும், 8ஆம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால், கணவன் அல்லது மனைவிக்கு காலுக்கு கீழே அடிபடும். எனவே, வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதேபோல், இரும்பு சம்பந்தமான பொருட்களை கையாளும்போதும் அதிக கவனம் தேவை.
வழிபாடு: சாமூண்டீஸ்வரி வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…