பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த பங்குனி மாதத்தில், சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 ஆம் இடத்தில் குரு, சுக்கிரனின் சேர்க்கை நடைபெறுவதால், அதிரடியன யோகம் கிடைக்கும் நாள். சந்தோஷம் பெருகக் கூடிய மாதம். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பணப் பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். முக்கிய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாத நபர்களுக்கு வரன் கிடைக்கும். குறிப்பாக, வியாபாரத்தில் மிக அதிக வருமானம் கிடைப்பதற்கான சிறந்த நேரமாக அமைகிறது.
அதே சமயம், 8 ஆம் இடத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால், வண்டி, வாகனங்களில் மிகக் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவைக்கு அதிகமான செலவுகள் ஏற்படலாம். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, அதிகம் செலவு செய்தல் கூடாது. சிக்கனத்துடன் செலவு செய்வது சிறப்பைத் தரும். மன அழுத்தம் உண்டாகலாம். குறிப்பாக ஆண்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, அதிக கவனத்துடன் செயல்படுவது சிறப்பைத் தரும்.
வழிபாடு: முருகப் பெருமானின் வழிபாடு சிறப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…