பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த பங்குனி மாதத்தில், துலாம் ராசிக்காரர்கள் மிகப்பெரிய கடன் அடைப்பதற்கான நேரமாக உள்ளது. வீடு வாங்குவது, பழைய நிலத்தை விற்பனை செய்து புதிய நிலம் வாங்குவது போன்றவை நடக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அமையக் கூடிய மாதமாக இந்த பங்குனி மாதம் உள்ளது. இந்த கால கட்டத்தில் தடைகள் ஏற்பட்டு நின்று போன திருமணங்கள் அனைத்தும் நடைபெறும் மாதம். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றங்களைக் காணும் மாதம்.
நல்ல தொழில் வளர்ச்சி உண்டாகும். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதுடன் நன்மை உண்டாகும். மனது நிறைவாகக் காணப்படும். எல்லா காரியங்களும் விரைவில் கைகூடி மென்மேலும் சிறப்பைத் தரும். இந்த மாதம் அமோகமானதாக அமைகிறது. எல்லா விதமான கடன்களும் நீங்கக் கூடிய மாதமாக அமைகிறது. மன உறுதியுடன் செயல்பட்டு, எதையும் நன்றாக செய்ய முடியும் என நம்பி இறங்கும் காலம். பெரியவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம், நல்ல வளமான பலன்களைப் பெற முடியும். கனமான பண வரவை எதிர்பார்க்கக் கூடிய மாதமாக பங்குனி மாதம் உள்ளது. தீர்க்கமான வெற்றி கிடைக்கும்.
வழிபாடு: நாமகிரி தாயார் வழிபாடு செழிப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…