ஜோதிடத்தின் பார்வையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் சனிபகவான் பெயர்ச்சி அடையும்போது அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதில்லை. இதனால், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனி பெயர்ச்சி காலத்தில் தங்கள் ராசியின் பலன்களை தெரிந்துக் கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அந்த அளவிற்கு சனியில் கணிப்பு துல்லியமானது. அப்படியாக, வரும் தை மாதம் 3 ஆம் தேதி ஜனவரி 17, 2023 ஆம் ஆண்டு சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
கும்ப ராசியில் 26 மாதங்கள் சஞ்சரிக்கும் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதன்படி, கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், கும்பம், மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும் ஆரம்பமாகிறது. இந்த நான்கு ராசிக்காரர்களும் பாதகமான சூழ்நிலையை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும். சனி பகவானின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பரிகாரம் ஒன்றே வழி. அதன்படி, சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த சனிப் பெயர்ச்சியின் போது, சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்தார். அங்கிருந்து கடந்த ஜூன் 5 ஆம் தேதி வக்ர நிலைக்கு மாறி, ஜூலை 12 ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். தற்போது மீண்டும் வரும் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையும் சனி பகவான், கும்ப ராசிக்கு ஏழரை நாட்டு சனி என்ற நிலையைக் கொடுக்கிறார். எனவே, கும்ப ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லா வேலைகளிலும் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் கையாள வேண்டும். குடும்பத்தில் பொறுமையாக நடந்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்:
ஏழைகளுக்கு உதவுவது நல்ல பரிகாரமாக இருக்கும். இது சனி பகவானின் கோப பார்வையிலிருந்து உங்களை காப்பாற்றும். எனவே, உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். சனிக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும்.
2017 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு 2025 மார்ச் 29 ஆம் நாள் வரை சனியின் எதிர்மறையான பலன்கள் இருக்கும். தற்போது ஏழரை நாட்டு சனியின் 2ஆம் கட்டத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்கள், வேலை செய்யும் இடத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வரர்ரை வழிபாடு செய்ய வேண்டும். கூடவே சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவதும் நல்லது.
[பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையானவையே.]
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…