2023 ஆம் ஆண்டில் நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகின்றன. 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு கிரங்களின் சஞ்சாரம் சாதமாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். சிலருக்கு பிரச்சனைகளும், சவால்களும் தொடர்ந்தே வரும். இருப்பினும், ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும், பிரச்சனைகளை போக்கவும் முடியும். இதோ 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் அவற்றின் பலன்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கையில் செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்றால், குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். அடிக்கடி சிவன் கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவும். வழிபாடோடு கோவில் வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய் கிழமைகளீல் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால், உங்க வீட்டில் செல்வம் பெருகும். மேலும், ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் இருக்க வெள்ளிக் கிழமை தோறும் தொடர்ந்து 27 நாட்களுக்கு வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி வழிபடவும்.
மிதுன ராசிக்கார்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். மேலும், வெண் பொங்கல் செய்து உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். இதனால், வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாவித செல்வமும் தேடி வரும். மேலும், ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண உதவி செய்வதும் நல்லது.
கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொண்டால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாம், வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளும் விலகும்.
சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால், மனதில் அமைதி ஏற்படும். உங்க வாழ்க்கையில் புண்ணியத்தை சம்பாதிக்க, மாற்று திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். மேலும், புதன்கிழமை மாலை கோயிலுக்கு கருப்பு எள் தானம் செய்வதும் நன்மை தரும்.
கன்னி ராசிக்கார்கள் குருபகவானை தவறாமல் வழிபட வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவுபொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால், வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும்.
துன்பங்கள் போக்கும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள். உங்களாய் இயன்ற அளவிற்கு ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். உங்க குழந்தைகளுக்கு புண்ணியத்தை சேர்க்க விரும்பினால், ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை கொடுங்கள்.
விருச்சக ராசிக்காரர்கள் கடன்களில் இருந்து தப்பிக்க லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும், அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு தாராளமாக இருக்கும். அதேபோல், தங்களால் இயன்ற அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் உயரத்திற்கு செல்லவும், நிம்மதி பெருகவும் சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜிலேபி ஸ்வீட்டை தானமாக வழங்குங்கள்.
தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபாட செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல், செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். ஆதரவற்ற வயதானவர்களுக்கு வசிக்க தேவையான உதவிகள் செய்தால் சகல தோஷங்களும் விலகும்.
மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். அதுமட்டுமல்லாமல், வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும் போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு வரும் பணவரவு இரட்டிப்பாகும். மேலும், ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீன ராசிக்காரர்கள் பௌர்ணமி நாட்களில் சிவ பெருமானை தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் கிடைக்கும். மேலும், நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். ஐயப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…