Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in TamilRepresentative Image.

நீதி பகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். ஒருவர் தன் கடமை, நேர்மையில் இருந்து தவறும் போது அதற்கான தண்டனையை, சனி பகவான் ஏழரை சனி வரும்போது கடுமையாக தண்டிப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். என்ன ஆகுமோ, எப்படி இருக்குமோ? என்று நடுங்குவோம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் நெஞ்சங்களிலும் பயத்தை கொடுப்பவர் சனி பகவான்.  

ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in TamilRepresentative Image

பொதுவாக, ஜோதிடத்தின் பார்வையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் சனிபகவான் பெயர்ச்சி அடையும்போது அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதில்லை. அப்படியாக, வரும் தை மாதம் 3 ஆம் தேதி ஜனவரி 17, 2023 ஆம் ஆண்டு சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.  

ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in TamilRepresentative Image

அதன்படி, மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, துலாம் புண்ணிய சனி, தனுசு தைரிய சனி என வருவதால், இந்த இராசிக்கார்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம். அவ்வப்போது சனிபகவானை வழிபாடு செய்துவாருங்கள், வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும் நன்றியை சொல்லி விட்டு வாருங்கள். அதுவே, கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், சிம்மம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியும், கும்பம், மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும் ஆரம்பமாகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியும் ஆரம்பமாகிறது. 

ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in TamilRepresentative Image

எனவே, இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும். மேலும், கும்ப ராசியில் 26 மாதங்கள் சஞ்சரிக்கும் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி பகவானின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பரிகாரம் ஒன்றே வழி. அதன்படி, சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள். குறிப்பாக, ஏழரை சனி நடக்கும் ராசிகள் இதை பின்பற்றினால், சிறப்பான பலன்களை பெற முடியும். 

ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in TamilRepresentative Image

ஏழரை சனி பரிகாரம்:

  • அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் முதற்முழு கடவுளான விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், ஏழரை சனி நாட்களில் கெடு பலன்களை நீக்கி நற்பலன்கள் கிடைக்கும். 
  • சனி பகவானுக்கும், பைரவருக்கும் அவர்களுக்கு உகந்த நாளில் விரதம் இருந்து நல்லெண்ணை தீபம் ஏற்ற வேண்டும். 
  • தினமும் காலை நேரத்தில் குளித்து முடித்துவிட்டு சனி பகவானின் வாகனமான காக்கைக்கு எச்சில்படாத சாதம் வைக்க வேண்டும். 
  • தினந்தோறும் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மகாவிஷ்ணுவின் அம்சமான வலம்புரி சங்கினை பூஜை அறையில் வைத்து தினமும் அதற்கு பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். 
  • பொன்னாசை, மண்ணாசை போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. அமங்கலமான சொற்களையும், கெட்ட வார்த்தைகளையும் எப்பொழுதும் யாரிடமும் உபயோகப்படுத்த கூடாது. 
  • அதேபோல், வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்கள் முன்னேற்றத்தை கெடுத்தல் போன்ற தீய எண்ணங்களை கைவிட வேண்டும். 
  • துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பவரை சனி பகவான் என்றும் பார்ப்பதில்லை. எனவே, உங்களால் முடிந்த அளவிற்கு இவற்றில் ஒன்றையாவது அணிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 
  • அடிக்கடி, பெருமாள் கோயிலுக்கு சென்று பூஜித்து வருவதால், சனி பகவானின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.
  • சனி பகவானுக்கு உரிய கோவில்களான திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானை மனதார வழிபட்டு வர உங்களுடைய கெடுபலன் நீங்கி நல்ல நிலைமையை அடைய முடியும்.
ஏழரை சனி தோஷத்தை குறைக்கும் எளிய பரிகாரங்கள் | Elarai Sani Pariharam in TamilRepresentative Image

மேலே சொன்ன பரிகாரங்களை தொடர்ந்து பின்பற்றி சனிக்கிழமை தோறும், சனி பகவானுக்கு உரிய


“ஓம் காகத்வஜாய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சனிப் ப்ரசோதயாத்”


என்ற மந்திரத்தை சொல்லி நல்லெண்ணெய் விளக்கேற்றி சனிபகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும்போதும் கூட இவற்றை பின்பற்றி வரலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்