மனிதர்கள் செய்யும் நல்வினைகளுக்கும், தீவினைகளுக்கும் ஏற்ற பலன்களைக் கட்டாயம் பெறுவர். இந்த நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ற பலன்களை அளிப்பவர், சனிபகவான். அதாவது, சனியைப் போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்றே கூறுவர். நல்வினை புரிந்தவர்களுக்கு வாரி அளிப்பதிலும், தீவினை புரிந்தவர்களுக்கு கடுமையான துன்பங்களையும் அளிப்பதில் வல்லவர். சனிபகவானின் அருளால், ஒருவர் அவர் வாழ்நாளில் செய்த நல்வினைகளுக்கும், தீவினைகளுக்கும் ஏற்ற பலன்களை வாழும் ஜென்மத்திலேயே அளிப்பார். அதே சமயம், தீவினைகளுக்கு ஏற்ற சனிபகவான் தரும் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
ஒவ்வொருவரின் வாழ்விலும், குறைந்தபட்சம் 3 முறையாவது வரக்கூடிய நிகழ்வாக ஏழரை நாட்டு சனி உள்ளது. இதில், முதல் முறை வரும் சனி மங்கு சனி எனவும், இரண்டாம் முறை பொங்கு சனி என்றும், மூன்றாம் முறையானது மரண சனி எனவும் அழைக்கப்படுகிறது.
அதன் படி, சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். இதில், நமது ராசிக்கு முந்தைய ராசியில் சனி பகவான் ஆட்சி புரியும் போது, நமக்கும் ஏழரை ஆண்டு சனி நிகழ்வு துவங்கும். இவ்வாறு முந்தைய ராசிக்கு இரண்டறை ஆண்டுகள், நமது சொந்த இராசிக்கு இரண்டரை ஆண்டுகள், நம் ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டறை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் சனியின் தாக்கம் இருக்கும்.
இந்த ஏழரை ஆண்டு காலத்தில் இருக்கும் சனியின் தாக்கம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, முதல் ஏழரை ஆண்டு காலம் விரைய சனி என்றும், அடுத்த இரண்டறை ஆண்டு காலங்கள் ஜென்ம சனி என்றும், மூன்றாவதாக உள்ள இரண்டறை ஆண்டு கால பாத சனி என்றும் பிரிக்கப்படுகிறது. இதில், விரைய சனி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக ஜென்ம சனி மற்றும் மூன்றாம் கட்டமாக பாத சனியும் உள்ளது.
நாம் வாழும் காலத்திலேயே நாம் செய்த கர்ம வினைகளுக்கேற்ற பலன்களைச் சனிபகவான் தருவார். இது, மனிதனின் வாழ்நாளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். சனிப்பெயர்ச்சியினால், உடல்நலம், மனநலம், பணப்பிரச்சனை, கடன் வாங்குதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், ஏழரை ஆண்டுகாலத்திற்குப் பின், சனி பகவான் பல்வேறு விதமான நன்மைகளைச் செய்வார். இந்த காலகட்டத்தில் நாம் செய்யும் சில நல்ல செயல்களும், பரிகாரங்களும் சனி பகவானின் அருளைப் பெற்று தீவினைகளைக் குறைக்க உதவுகிறது.
ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களில் பைரவர் வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில், ஏழரை சனி நடக்கும் காலங்களில், அந்த ராசிக்காரர்களுக்கு பைரவரை வழிபட்டால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அஷ்டமியில் பைரவரை கோயிலில் சென்று தரிசனம் செய்ய வேண்டும். தினமும், பைரவர் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து வந்தால், பைரவர் அருள்புரிவார். இதனால், சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…