நீதிக்கடவுளாக விளங்கும் சனி பகவான் நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ற பலன்களை அளிப்பார். இதனை கர்ம வினை என்றே அழைப்பர். அதாவது நல்வினைகள் புரிந்தவர்க்கு பூரண அருள் வணங்கி வெற்றியையும், தீவினைகள் புரிந்தவர்களுக்கு நல்ல பாடங்களையும் கற்றுத் தருவார். இருப்பினும், சனி பகவான் தரும் பாதகமான பலன்களிலிருந்து விடுபடுவதற்கு சில பரிகாரங்கள் உள்ளது. அந்த வகையில், சனி பகவானை வேண்டி விரதம் இருப்பதும், ஆஞ்சநேயப் பெருமானை துதிப்பது, பாவச்செயல்களை தவிர்ப்பது உள்ளிட்டவை அடங்கும்.
அதே போல, சனீஸ்வரரின் அருளைப் பெறுவதற்கு சனி மந்திரமும் உதவும். கர்ம பலன்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கும் சனி பகவானின் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கு, சனி யந்திரத்தை பூஜிப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். சனியின் பாதகப் பயனால், பல்வேறு சிக்கல்கள் நம்மை சூழும். ஆனால், இவற்றில் இருந்து நம்மை காப்பது என்பதும் முக்கியமானதாகும். சனி பகவானைச் சாந்தப்படுத்தி, நமக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் குறைப்பதற்கு சனி யந்திரம் உதவும்.
இதனுடன், சனி பகவானை மகிழ்விப்பதற்கு, சனி பகவானுக்குரிய சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். சனி பிரதோஷத்தில் விரதம் இருக்க வேண்டும். மேலும், சனிக்கிழமை நாள்களில் கோவிலுக்குச் சென்று எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். இந்த தினத்தில், முழு உளுந்து, புஷ்பராக ரத்தினம், இரும்பு, கருப்பு துணி, எண்ணெய் உள்ளிட்டவற்றைத் தானமாக அளிக்கலாம்.
சனி பகவானின் மூல மந்திரம் ஒருவரது தீய கர்ம வினைகளை நீக்கி நல்வினைகளை அருள்புரியும்.
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” – இந்த மந்திரத்தை 40 நாள்களில் 19,000 முறை கூற வேண்டும்.
இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம், சனி பகவானின் அனைத்து கஷ்டங்களும் பொடியாகி, நல்வினைகளை அருள்வார் என்று கூறுவர்.
சனி பகவானின் மனதைக் குளிர்விக்கும் வகையில், இந்த மந்திரங்களை உச்சரித்தால், வரும் துன்பங்களை நீக்கி, சனி பகவானின் பூரண அருள் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…