Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏழரை சனி நடக்கும் ராசிக்காரர்களுக்கு நெருக்கடியில் இருந்து மீள பரிகாரங்கள் | Sani Peyarchi Pariharam in Tamil

Priyanka Hochumin Updated:
ஏழரை சனி நடக்கும் ராசிக்காரர்களுக்கு நெருக்கடியில் இருந்து மீள பரிகாரங்கள் | Sani Peyarchi Pariharam in TamilRepresentative Image.

நம்முடைய தமிழ் நீதிக்கடவுளான சனி பகவானின் வக்கிரப் பார்வையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இவர் ஏழரை சனி மற்றும் சனி தசை காலங்களில் எல்லாருக்கும் கொடுமை செய்ய மாட்டார். அவரவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப தான் அவர் பலன்களை அளிப்பார். நாம் பேச்சு வழக்கில் காலம் மாறினால் யார் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது கூறுவதும் கூட இவரின் பார்வையால் கூட இருக்காலாம். ஏனெனில் இவரின் சுப மற்றும் அசுப பார்வையில் என்னென்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த பதிவில் சனி பகவானின் கோவங்களை குறைக்க சில பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பாப்போம்.

ஏழரை சனி நடக்கும் ராசிக்காரர்களுக்கு நெருக்கடியில் இருந்து மீள பரிகாரங்கள் | Sani Peyarchi Pariharam in TamilRepresentative Image

சுப பார்வை, அசுப பார்வை

ஜோதிடத்தில் இருக்கும் 12 ரசிக்கும் ஏழரை சனி மற்றும் சனி தசை நடக்கும். அப்படி நடக்கையில் நம்முடைய கர்மங்களுக்கு ஏற்ப அவரின் பார்வை படும். சனி பகவானின் சுப பார்வை நமீது பட்டால் நமக்கு கோடி நன்மைகள் வந்து சேரும். பரம ஏழையாக இருந்தால் அவருக்கு என்ன பலன் கிடைக்குமோ அது கிடைத்தே ஆகும். சுப காரியங்கள், தொழில் வளர்ச்சி, பண வரவு, வேலை, படிப்பு என்று அனைத்திலும் நற்பலன்கள் அமையும்.

இதுவே நாம் செய்த பாவங்களுக்கு ஏற்ப அவரின் அசுப பார்வை நமீது விழுந்தால், என்ன செய்தாலும் நம்மால் தப்பிக்க முடியாது. சும்மாவா சொல்லியிருக்காங்க, மரணத்தின் விட கொடியது சனி பகவானின் வக்கிரப் பார்வை பட்டால் என்று. அதே போல அனைத்திலும் தடங்கல், கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போவது, கண் முன்பே வாய்ப்புகள் நம்மை விட்டு போவது என்று எல்லா கொடுமைகளும் அவரவரின் கர்மத்திற்கு ஏற்ப நடக்கும்.

ஏழரை சனி நடக்கும் ராசிக்காரர்களுக்கு நெருக்கடியில் இருந்து மீள பரிகாரங்கள் | Sani Peyarchi Pariharam in TamilRepresentative Image

பரிகாரங்கள்

எனவே, ஜோதிட ஸ்தாத்திரத்தின் படி, கடும் கோபத்தில் இருக்கும் சனி பகவானுக்கு சில பரிகாரங்கள் செய்து அவரை சாந்தியடைய செய்யலாம்.

ஹனுமான் சாலிசா பாராயணம்

ஆஞ்சிநேயர் சனியின் நெருங்கிய நண்பர் என்பதால், பொதுவாகவே சனி பகவான் ஆஞ்சநேய பக்தர்களை சீண்ட மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே, சனிக்கிழமை ஹனுமான் சாலிசா பாராயணம் ஏற்படப்போகும் பிரச்சனைகளில் இருந்து காத்துக்கொள்ளலாம். மேலும் சனிக்கிழமை சிவ பெருமானுக்கு வழிபாடு செய்து, சிவபுராணம் படிப்பது கூடுதல் நண்மை அளிக்கும்.

விரதம் இருப்பது

சனி பகவானை மனதார பிராத்தனை செய்து ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து வந்தால் நன்மை. மேலும் அவரின் ஆசீர்வாதம் பெற்று வாழ்வில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விலகிக்கொள்ளலாம்.

ஏழரை சனி நடக்கும் ராசிக்காரர்களுக்கு நெருக்கடியில் இருந்து மீள பரிகாரங்கள் | Sani Peyarchi Pariharam in TamilRepresentative Image

விளக்கேற்றுவது

சனிக்கிழமை அன்று காலையில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது நற்பலன்களை அளிக்கும். அதே போல் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உங்கள் முகத்தை பார்த்து அதை அப்படியே சனி பகவான் கோவிலுக்கு தானம் செய்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட இருக்கும் இருள் நீங்கி ஜொலிக்க வைக்கும். மேலும் கருப்பு நாய்க்கு உணவளிப்பது கூடுதல் நற்பலன்களை அளிக்கும்.

ஸ்லோகம் சொல்வது

சனி பகவானின் மந்திரங்களை ஒவ்வொரு சனி கிழமையும் காலையில் குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி உச்சரியுங்கள். 'ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌண் சஹ சனிச்சராய நம' மற்றும் 'ஓம் சனிஸ்வராய நம' ஆகியவை தான் அந்த மந்திரங்கள். அது மட்டும் இன்றி இல்லாதவர்களுக்கு உணவளிப்பது, தானம் செய்வது என்று உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். இப்படி பரிகாரங்கள் செய்வதன் மூலம் சனி பகவானின் பார்வையால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விலகலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்